யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இரு பொலிஸ் அதிகாரிகளும் தற்செயலாக சந்தித்த போது பழைய விரோதம் காரணமாக அவர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
நிலைமை மோசமடைவதை அவதானித்த விருந்தினர் விடுதியின் முகாமையாளர் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுடன், இது குறித்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய இருவருக்கும் இடையில் பணி நிமிா்த்தமே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.