Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அரசாங்கத்தினது எந்த உதவித்திட்டங்களும் எமக்குத் தேவையில்லை: பன்னங்கண்டி மக்கள் தெரிவிப்பு

அரசாங்கத்தினது எந்த உதவித்திட்டங்களும் எமக்குத் தேவையில்லை: பன்னங்கண்டி மக்கள் தெரிவிப்பு

ஒரு மாத காலத்திற்கு மேலாகப் போராடிவரும் எமக்கு, இந்த அரசாங்கம் வழங்கும் வீட்டுத்திட்டம் போன்ற உதவித்திட்டங்கள் தேவையில்லை, நாம் உழைத்து முன்னேறுவோம். என பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கான காணி உறுதியினை மட்டும் தற்போதைக்கு பெற்றுத்தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 31ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கையில்,
“யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். நாம் வாழ்ந்த இந்த நிலத்தையாவது அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ வழங்க முன்வரவேண்டும். எமக்கு வீட்டுத்திட்டமோ அல்லது அரச உதவிகளோ எதுவும் தேவையில்லை. எமக்கு எமது காணிகளின் அனுமதிப் பத்திரங்களை தந்தால் மட்டும் போதுமானது”என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …