சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் யூ செங்சென்ங் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று சீனாவின் குளோபல் ரைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான நான்கு நாட்கள் பயணத்தை அவர் இன்று ஆரம்பிக்கவுள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் பாகிஸ்தான் செனெட் தலைவர் மியான் ராசா ரப்பானி ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
யூ செங்சென்ங், சீன மக்கள் அரசியல் ஆலோசனைச் சபையின் தேசிய குழுவின் தலைவராவார்.