Wednesday , June 25 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புலிகளை வேவுபார்த்த விமானம்; முதன்முறையாக ஏற்றுக்கொண்டது இந்தியா

புலிகளை வேவுபார்த்த விமானம்; முதன்முறையாக ஏற்றுக்கொண்டது இந்தியா

வன்னிப் போரின்போது ஸ்ரீலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா இதனைத் தெரிவித்துள்ளார்.

அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படையின் ராஜாளி தளத்தில் இருந்தே இந்த விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது.

ஐ.என்.எஸ் ராஜாளி தளத்தின் வெள்ளி விழா மற்றும் இந்திய கடற்படையினால் 29 ஆண்டுகளாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்ட ரியூ 142 எம் விமானத்தை, சேவையில் இருந்து விலக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி தளத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே இந்த விடயத்தை இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா அம்பலப்படுத்தியுள்ளார்.

மாலைதீவில் ஒப்பரேசன் கக்டஸ் நடவடிக்கையிலும் இந்த விமானம் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

2013ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியப் பெருங்கடலில் சீனா தனது நீர்மூழ்கிகளை நிறுத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் நடமாடும் சீன நீர்மூழ்கிகளின் பாதைகளை இந்தியக் கடற்படை கண்டு பிடித்து கண்காணித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …