முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மோல்டா நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
உலகளாவிய தலைமைத்துவ அமைப்பின் (Global Leadership Foundation) மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் மோல்டா சென்றுள்ளார்.
இம்மாநாட்டில் ‘பன்முகத்தன்மையை நிர்வகித்தல் தீவிரவாதத்தை எதிர்த்தலும்’ எனும் குழு விவாதத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.