Wednesday , June 4 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை வாழ் மக்களுக்கு மின்சாரம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி

இலங்கை வாழ் மக்களுக்கு மின்சாரம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் முழுமையான மின் தேவையை நிறைவு செய்ய 300 மெகா வாட்ஸ் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வளம் கண்டறியப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம், மின்வெட்டு நடைமுறை நீக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

‘நாட்டில் ஏற்பட்டுள்ள 300 மெகா வாட்ஸ் மின் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான வழிவகைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பற்றாக்குறை கடந்த ஆண்டு தொடக்கம் காணப்படுகின்றதுகளனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைத்தில் 500 தொடக்கம் 600 மெகா வோட்ஸ் மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்ய முடியும். மின் நெருக்கடிக்குத் தீர்வு காண குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகாலத் திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகின்றது.

தேசிய மின் வழங்கலில் 3 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரத்து 500 மெகா வோட்ஸ் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நீண்டகாலத் திட்டத்துக்கான வரைவு அமைச்சரவையில் அடுத்தவாரம் முன்வைக்கப்படவுள்ளது.அதனால், குறுகிய காலத் தீர்வாக தேசிய மின் வழங்கலில் மேலும் 500 தொடக்கம் 600 மெகா வாட்ஸ் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv