மதவாச்சியில் மரத்துடன் மோதியது வான்! – சம்பவ இடத்திலிலேயே சாரதி பலி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
மதவாச்சியில் மரத்துடன் மோதியது வான்! – சம்பவ இடத்திலிலேயே சாரதி பலி

மதவாச்சி, பூனாவைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிலந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த அரிசி மூடைகளை ஏற்றிய பட்டா ரக வாகனம் இன்று மாலை 4.30 மணியளவில் மதவாச்சி, பூனாவைப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதியான கல்குனாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய அபல் தாரக்க சஞ்சீவ விமலசேன சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

World News

Srilanka News

Tamilnadu News

Video News