கடத்தப்பட்ட கப்பலிலுள்ள 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியீடு!
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எண்ணெய்க்கப்பலில் பணிபுரிந்துகொண்டிருந்த 8 இலங்கையர்களின் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன என்று இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்தகவல்களின்படி இந்த 8 இலங்கையர்களின் பதவிகளும் இருப்பிடங்களும் வருமாறு:-
1) கப்பல் கப்டன் நிகலஸ் என்டனி (மட்டக்குளி)
2) பிரதம அதிகாரி ருவன் சம்பத் (மத்துகம)
3) பிரதான பொறியியலாளர் ஜயந்த களுபோவில (ஹொரணை)
4) இரண்டாம் அதிகாரி திலீப ரணவீர (காலி)
5) இரண்டாம் பொறியியலாளர் ஜனக சமேந்திர (தெவிநுவர)
6) மூன்றாம் நிலை அதிகாரி லஹிரு இந்துநில் (அக்குரஸ்ஸ)
7) இரண்டாம் அதிகாரி சுனில் பெரேரா (கந்தானை)
8) சமையற்காரர் ஏ.சண்முகம் (நீர்கொழும்பு)
இப்போது கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த 8 இலங்கையர்களும் எந்தவிதமான துன்பங்களும் இல்லாமல் சௌக்கியமாக இருக்கின்றனர் என்று தெரியவந்திருக்கின்றன என்று கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் சமிந்த வலாக்குலுகே தெரிவித்துள்ளார்.