மந்திகையில் வர்த்தகர் மீது தாக்குதல் !
கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் மீது மந்திகை துறையாமூலைப் பகுதியில் மூவர் தாக்குதல் நடத்தியதில் காயங்களுக்கு இலக்கான வர்த்தகர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.செந்தில்குமரன் (வயது-32) என்பவரே தாக்குதலுக்குள்ளானவராவார்.
கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் மீது மந்திகை துறையாமூலைப் பகுதியில் மூவர் தாக்குதல் நடத்தியதில் காயங்களுக்கு இலக்கான வர்த்தகர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.செந்தில்குமரன் (வயது-32) என்பவரே தாக்குதலுக்குள்ளானவராவார்.
மந்திகைப் பகுதியில் உள்ள தமது வர்த்தக நிலையத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை துறையாமூலைப் பகுதியில் வைத்து வழிமறித்து இனம் தெரியாத மூவர் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




