பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கைச்சாத்தினைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.
மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.
அத்துடன் இந்த பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரேரணை எதிர்வரும் 20ஆம்இ 21ஆம் அல்லது 22ஆம் திகதிகளில் ஏதாவதொரு தினத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்றும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும்இ பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவது உறுதி என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.