Sunday , June 29 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / ஜனாதிபதியாக களமிறங்கும் நிலை ஏற்பட்டால் அமெரிக்க குடியுரிமையை தூக்கியெறிவேன்

ஜனாதிபதியாக களமிறங்கும் நிலை ஏற்பட்டால் அமெரிக்க குடியுரிமையை தூக்கியெறிவேன்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விஷேட நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

நாட்டின்மீது உண்மையான பற்றும் அன்பும் உள்ள ஒருவரும், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த ஒருவரும், இராணுவத்தினரை பாதுகாக்கும் ஒருவரும், நாட்டில் கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஒருவரும், சுயநலமற்ற தூய்மையான அரசியலில் ஈடுபடும் ஒருவருமே ஜனாதிபதி வேட்பாளராக நிற்க தகுதியுடையவர்.

அதனைத் தொடர்ந்து “தாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் தகுதிகளும் உங்களிடம் இருப்பதாகவும், நீங்களே ஜனாதிபதியாக வர வேண்டும் எனவும் சிலர் கருத்து வெளியிடுகின்றார்களே…? ” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கோட்டா “சிலர் அவ்வாறு கூறுகின்றார்கள் ஆயினும் காலம் அதனைத் தீர்மானிக்கும். அவ்வாறு ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்க வேண்டுமாயின் நிச்சயமாக களமிறங்குவேன்” எனக் கூறியுள்ளார்.

அதற்காக அமெரிக்க குடியுரிமை தடையாக இருக்கும் பட்சத்தில் அதனையும் தூக்கி எறிய வேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, சிங்கள இனத்தவரின் வாக்குகள் மாத்திரம் இல்லாமல் தமிழ் – முஸ்லிம் என்ற சிறுபான்மை இனத்தவர் அனைவரதும் வாக்குகள் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு எனவும் கோட்டாபய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …