Saturday , June 28 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய சட்டம், ஒழுங்கு அமைச்சர் அடுத்தவாரம் நியமனம்

புதிய சட்டம், ஒழுங்கு அமைச்சர் அடுத்தவாரம் நியமனம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு அடுத்த வாரம் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் நடந்த கலவரமான நிலைமையை கட்டுப்படுத்துவதில் பிரதமர் தலையீடுகளை மேற்கொண்டதால் புதிய அமைச்சரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஐக்கிய தேசியக்கட்சிக்குரிய அமைச்சு பொறுப்பு என்பதால் அடுத்த வாரம் புதிய அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்வார்.

இதனிடையே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருந்துவருவதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கடந்த அரசில் ஊழல்-மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டஇ ராஜபக்சவினர் உள்ளிட்ட அவரது அணியினர் மீது சரத் பொன்சேகா கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடும் என்பதால் அவருக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …