மன்னார்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுவுக்குற்பட்ட வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராமத்தினுள் நேற்று வியாழக்கிழமை(30) இரவு காட்டு யானைகள் குறித்த கிராமத்தினுள் உற் புகுந்து விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையினை சேதப்படுத்தியுள்ளதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த கிராமத்தினுள் தொடர்ச்சியாக காட்டு யானைகள் உற் புகுந்து விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையினை சேதப்படுத்தி வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை(30) இரவு குறித்த கிராமத்தினுள் உற் புகுந்த காட்டு யானைகள் விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையினை முழுமையாக சேதப்படுத்தியுள்ளதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த கிராம மக்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த கிராமத்தினுள் தொடர்ச்சியாக உற்செல்லுகின்ற காட்டு யானைகள் தொடர்ச்சியாக விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையினை முழுமையாக சேதப்படுத்தி வருவதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராம மக்கள் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகம் மற்றும், மடு பிரதேசத்தில் உள்ள வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருக்கு பல தடவைகள் அறிவித்தல்களை வழங்கியும் இது வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை(30) இரவு குறித்த கிராமத்தில் சென்ற காட்டு யானைகள் அங்கள்ள தோட்டங்களில் காணப்பட்ட வாழை, தென்னை, பப்பாசி, மரவள்ளி, பூசணி போன்ற பயண் தருகின்ற பயிர்களை அதிகலவில் சேதப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக யானைகள் தமது பயிர்களை சேதப்படுத்தும் பட்சத்தில் தமது வாழ்வாதாரம் முற்று முழுதாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே காட்டு யானைகளின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதீக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.