“நல்லாட்சி அரசு அமையப்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதனை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.”
– இவ்வாறு அரசை வலியுறுத்தி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு முன்னால் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோத்து நாடு தழுவிய ரீதியில் சோபித தேரர் தலைமையிலான சிவில் அமைப்புகள் பிரசாரத்தை மேற்கொண்டன. அந்தச் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுடன் நல்லாட்சி அரசின் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, மனோ கணேசன் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பலரும் பங்கேற்றனர்.