வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடைந்தனர்.
வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக பிற்பகல் 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு விமானநிலையத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த ஹையேஸ் வாகனமும், கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனமும் விபத்துக்குள்ளாகின.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காந்தன் (வயது – 56) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் ஹையேஸ் வாகனத்தைச் செலுத்தி வந்தார் என்று கூறப்பட்டது.
மேலும் மூவர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர். அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துத் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.