வவுனியா வளாகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வவுனியா வளாகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு நாளை (09.08.2017) நடைபெற உள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா வளாகத்தில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே குறித்த ஆய்வு மாநாடு நாளை காலை 9.00 மணிக்கு பம்பைமடுவில் அமைந்துள்ள வியாபார கற்கைகள் பீடத்தில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுபற்றி குறிப்பிடுகையில், நாளை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி க.கோப்பெரும்தேவியின் ஏற்பாட்டில் சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது.

அத்துடன் பேண்தகு அபிவிருத்திக்கான பெறுமதி உருவாக்கம் தொடர்பான 50 ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களால் இம்மாநாட்டில் வாசிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *