அரசியல் தீர்வு மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும் : சம்பந்தன்
அரசியல் தீர்வானது நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அமைய வேண்டுமென்பதோடு, அந்த தீர்வானது நாட்டில் இதுவரை காலம் நடைபெற்ற அநீதிகள் மற்றும் அநியாயங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அமைய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பேண்தகு யுகத்தின் மூன்றாண்டு உதயம் தேசிய திட்டத்தின் கிழக்கு மாகாண மக்கள் சந்திப்பின் ஒரு பகுதியாக, ஏறாவூரில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பஙகேற்று உரையாற்றிய அவர், தமிழ் மக்களை எவரும் ஏமாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
துரதிஷ்டவசமாக இந்த நாட்டில் தேசியப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை எனவும் எனினும் அதற்கான தீர்வு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.




