பேருந்தின் சில்லில் சிக்குண்டு பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று மஸ்கெலியா, சாமிமலை கவரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது. மஸ்கெலியாவிலிருந்து சாமிமலை நோக்கி இன்று (வியாழக்கிழமை) பயணித்த தனியார் பேருந்திலிருந்து, குறித்த பெண் இறங்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் கற்களை வீசி பேருந்தை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்ட போதிலும், பொலிஸாரின் தலையீட்டினால் பதற்றம் தணிந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி […]





