Tag: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியம்

தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியமாக உள்ளது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வட.மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் துருக்கி தூதுவர் வினவியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த முதலமைச்சர், “முன்னைய […]

பட்டதாரிகளின் பிரச்சனை : ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க விக்னேஸ்வரன் தீர்மானம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தீர்வு எட்டப்பாடும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல விடங்களை வலியுறுத்தி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று 29 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க […]

முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி கனடா- ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் John Tory அவர்களின் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதிக்கு சென்ற அவர் மலர்வளையம் வைத்து சுடரேற்றியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்திற்கு சென்று போராட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த வியஜத்தின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.   […]

அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம்

அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை

அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்குவது முற்றிலும் தவறானது என்று தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் மக்களைச் சென்றடையாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை முதலமைச்சர் இன்றையதினம் நேரில் சென்று சந்தித்து […]

வடமாகாண சபை

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா?

வடமாகாண சபையால் போர்க்குற்ற விசாரணைகளை நடாத்த முடியுமா? பன்னாட்டு சட்ட நிபுணர்களையும் நீதிபதிகளையும் வரவழைத்து வட மாகாண சபையே போர்க்குற்ற விசாரணையை நடாத்த முடியுமா? என்று ஆராயுங்கள். சட்ட ஏற்பாடுகள் அதற்கு இடம் கொடுக்குமா? என்பதைக் கண்டறியுங்கள். எமது மக்கள் நீதி பெற வேண்டுமானால் இதுவே ஒரே வழி’ இவ்வாறு கூறியிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். மன்னார் வட்டக்கண்டல் படுகொலை நினைவு நிகழ்வில் கடந்த திங்கட்கிழமை உரையாற்றிய பொழுது அவர் […]

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன்

இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரன் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நாளாந்தம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க […]

வடமாகாண முதலமைச்சர்

கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர்

கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.