மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார் தமிழ்த் தேசியத்திற்காக போராடிய முன்னாள் பிரதியமைச்சர் கருணாஅம்மான் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முகவராக செயற்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த துரோகத்தையே, கருணா அம்மானும் தமிழ் மக்களுக்கு செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், […]
Other News
பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள்
பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர்கள் பாடசாலையை புறக்கணித்து மக்களுடன் கைகோர்த்துள்ளனர். தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாகவும், தமது காணிகளை மீள கையளிக்குமாறும் வலிறுத்தி இம்மக்கள் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, தமது சத்தியாக்கிரக போராட்டத்தை கடந்த மூன்று நாட்களாக சுழற்சிமுறையிலான […]
மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம்
மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதின்மூன்றாம் நாளகவும் தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வீடுகளுக்கு செல்வோம் என நம்பி வந்தபோதும் தமது வீடுகளில் […]
அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை – மைத்திரி
அதிகாரத்தை தாரை வார்த்தவன் நான், தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடமில்லை நீதித்துறைக்குரிய நியமனங்களை மேற்கொள்ளும்போது தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட விருப்பத்தக்கமைய தீர்மானமெதுவும் எடுக்கவில்லை என ஜனாதிபதி அதிகாரத்தை தாரை வார்த்தவன் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற 2017 தேசிய சட்ட சம்மேளனத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இணையத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களாலும் சில நீதித்துறை நிறுவனங்களாலும் […]
அம்பாந்தோட்டை முதலீட்டை தாமதிக்க சீனா தீர்மானம்
அம்பாந்தோட்டை முதலீட்டை தாமதிக்க சீனா தீர்மானம் சட்ட மற்றும் அரசியல் ரீதியான தடைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் நீக்கும் வரைக்கும், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் 1.1 பில்லியன் டொலரை முதலீடு செய்யும் திட்டத்தை தாமதிப்பதற்கு சீனா தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான பேச்சுக்களில் தொடர்புடையவர்களை ஆதாரம் காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பெரியளவில் கடனாளியாகியுள்ள ஸ்ரீலங்காவிற்கு நிதி தேவைப்படுவதாகவும், எனினும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் நலன்களுக்கான கொடுப்பனவு […]
இராணுவத்தின் செயற்பாட்டால் கேப்பாபுலவு மக்கள் அச்சத்தில்: 17ஆவது போராட்டம் இன்று
இராணுவத்தின் செயற்பாட்டால் கேப்பாபுலவு மக்கள் அச்சத்தில்: 17ஆவது போராட்டம் இன்று தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருபவர்களை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து மறைமுக அச்சுறுத்தலை விடுவித்து வருவதாக கேப்பாபுலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 17ஆவது தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடலுக்கு கிழக்காக அமைந்துள்ள பிலவுக்குடியிருப்பில் உள்ள, 84 குடும்பங்களுக்கச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த […]
பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி – எம்.பி.தம்பிதுரை
பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி – எம்.பி.தம்பிதுரை சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் பதவியேற்க அழைத்திருப்பது சின்னமாவுக்கு கிடைத்த வெற்றி என எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். இது சசிகலாவுக்கு கீடைத்த வெற்றி என லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கும், ஓபிஎஸ்க்கும் இடையே […]
கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும்
கொறடாவின் உத்தரவை ஏற்று ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வாக்களிக்காவிட்டால் பதவிக்கு ஆபத்து ஏற்படும் தமிழகத்தில் அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பதில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவரானார். நேற்று முன்தினம் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான உடனேயே எடப்பாடி பழனிச்சாமி தேர்வு […]
எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு
எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி […]
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது – ஈவிகேஎஸ். இளங்கோவன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்காது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு […]





