நானுஓயாவில் சூறாவளி 112 பேர் இடப்பெயர்வு, 21 வீடுகள் பாதிப்பு நுவரெலியா – நானுஓயா கிளாரன்டன் மேற்பிரிவில் வீசிய மினி சூராவளி காரணமாக 112 பேர் இடம்பெயர்ந்து தோட்ட தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்றைய தினம் மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்கு இடைப்பட்ட தருணத்தில் வீசிய இந்த சூறாவளியால் 21 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. ஆனால், இதுவரையில் அனர்த்த முகாமைத்துவத்தில் இருந்து எவரும் தமது பகுதிக்கு […]
Other News
நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம்! – ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா வலியுறுத்து
நல்லிணக்கத்தை ஏற்படுத்த பொறுப்புக்கூறல் அவசியம்! – ஐ.நா. அறிக்கையாளர் ரீட்டா வலியுறுத்து “வடக்கிலிருந்து படையினரை அகற்றுதல், காணாமல்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசு உடனடியாகக் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு சிறுபான்மை இன மக்கள் விவகாரங்கள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 34ஆவது […]
தலைவர்களுக்கு பாடம்புகட்ட தமிழருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: சிவில் அமைப்புகள்
தலைவர்களுக்கு பாடம்புகட்ட தமிழருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்: சிவில் அமைப்புகள் ஆளுந்தரப்பினரின் எதிர்ப்புக்கள் மத்தியிலும் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு, வழங்கிய வாக்குறுதியின்படி புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்று நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடத்திற்கு ஏறச்செய்த சிவில் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சில மூத்த உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்பு மீதான சர்வஜன வாக்கெடுப்புக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையிலேயே சிவில் அமைப்புக்கள் இதனை வலியுறுத்தியுள்ளன. […]
வறுமையை ஒழிக்க முல்லைத்தீவு , மட்டக்களப்பு பிரதேசங்களில் விசேட திட்டம்
வறுமையை ஒழிக்க முல்லைத்தீவு , மட்டக்களப்பு பிரதேசங்களில் விசேட திட்டம் அநுராதபுரம் பொலநறுவை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 2016ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் இவ்வருடத்தில் முல்லைத்தீவு மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த கருணாதிலக இந்த […]
கலப்பு நீதிப் பொறிமுறையை அரசு ஒருபோதும் அனுமதிக்காது
கலப்பு நீதிப் பொறிமுறையை அரசு ஒருபோதும் அனுமதிக்காது கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்று பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா நேற்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் வலியுறுத்தியதாவது, மனித உரிமைகளை பாதுகாப்பதில் நல்லாட்சி அரசு வினைத்திரனுடனும், தீவிரமாகவும் செயற்பட்டுவருகின்றது. உள்ளகப் பொறிமுறைமீது அரசு […]
உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் : பிரதமர் தெரிவிப்பு
உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் : பிரதமர் தெரிவிப்பு உலகலாவிய கடல் பயங்கரவாதம் பொருளாதார அனுகூலங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களில் பாதிக்கு மேற்பட்ட கடற்கலங்கள் இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கின்றன. இது ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார அனுகூலத்தை ஏற்படுத்தும் விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று ஆரம்பமான மாநாட்டில் ஸ்கைப் […]
குறைப்பாடு நிலவும் 50 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை
குறைப்பாடு நிலவும் 50 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் 50 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.’ ஆசிரியர் சேவையில் நியமனங்கள், பதவி உயர்வுகள் ஆகியன ஒழுங்கு விதிகளுக்கு அமையவே மேற்கொள்ளப்படுகிறது. ஆசிரியர் பயிற்சிக்காக வரவு செலவுத் திட்டத்தில் இரண்டு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டுத் […]
இலங்கையில் முதலீடு செய்ய தென்கொரிய விருப்பம்
இலங்கையில் முதலீடு செய்ய தென்கொரிய விருப்பம் ஆய்வு தொடர்பான அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தென்கொரியா தயாராக உள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன் பியுங் சே தெரிவித்துள்ளார்.’ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, இலங்கை மெகா பொலிஸ் திட்டத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு தென்கொரியா […]
சர்வதேச தலையீட்டுடனான பொறிமுறையே தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் : ஜெனீவாவில் கஜேந்திரகுமார்
சர்வதேச தலையீட்டுடனான பொறிமுறையே தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் : ஜெனீவாவில் கஜேந்திரகுமார் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான உள்ளகப் பொறிமுறைக்கு வெளிநாடுளின் தலையீடு இருந்தால் மாத்திரமே நம்பகத்தன்மை தோற்றம் பெறும் என்றும் அதுவே, தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது அமர்வில், […]
மட்டக்களப்பில் 4 வயது சிறுவன் அடித்துப் படுகொலை! – சந்தேகத்தில் வளர்ப்புத் தாய் கைது
மட்டக்களப்பில் 4 வயது சிறுவன் அடித்துப் படுகொலை! – சந்தேகத்தில் வளர்ப்புத் தாய் கைது மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாப் பிரதேசத்தில் நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி, நாவற்குடா மாதர் வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அச்சிறுவனின் வளர்ப்புத் தாய் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். […]





