ஸ்ரீலங்கா வருகிறார் சீன அமைச்சர் சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சாங் சங்கூவன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்ரீலங்காவிற்கு வருகை தரவுள்ளார். இவர் இந்த விஜயத்தை இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் 19 பிரதிநிதிகளும் வருகை தரவுள்ளனர். இதன் போது ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்தரையாடல்களில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இரு நாட்டுக்குமிடையிலான […]
Other News
முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி
முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி கனடா- ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் John Tory அவர்களின் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதிக்கு சென்ற அவர் மலர்வளையம் வைத்து சுடரேற்றியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்திற்கு சென்று போராட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த வியஜத்தின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். […]
அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை
அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்குவது முற்றிலும் தவறானது என்று தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் மக்களைச் சென்றடையாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை முதலமைச்சர் இன்றையதினம் நேரில் சென்று சந்தித்து […]
இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது – பிரதமர்
இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது – பிரதமர் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு இடமளிக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதே வேளை நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுவதாகவும் பிரதமர் கூறினார். பிரதமர் காலியில் நெலும் ஹப்பிட்டிய ரிதிதரு இளைஞர்களினால் […]
பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 2 – OR என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உதவ விருப்பம் தெரிவிப்பு
பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 2 – OR என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உதவ விருப்பம் தெரிவிப்பு இலங்கையில் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின வைபவத்திற்கு சமகாலத்தில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 2 –OR என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உதவுவதற்கு விருப்பம்ம தெரிவித்துள்ளது. அதன் தலைவரும் அவுஸ்திரேலிய ஒரியன்டல் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவருமான Jun Hong Lu உள்ளிட்ட […]
மஹிந்தவுக்கு நடந்ததை நினைவில் வையுங்கள்! – அரசை எச்சரிக்கின்றார் சுமந்திரன்
மஹிந்தவுக்கு நடந்ததை நினைவில் வையுங்கள்! – அரசை எச்சரிக்கின்றார் சுமந்திரன் “சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி வழங்கிவிட்டுப் பின்னர் போக்குக் காட்டிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு நடந்த கதியை இந்த அரசு நினைவில் வைத்திருக்க வேண்டும். இதனை மனதிலிருத்தியாவது சரியாகச் செயற்பட வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளைப் போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடுத்தவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் […]
சொன்னதை அரசு செய்யத்தவறின் ஐ.நா வே பொறுப்பேற்க வேண்டும்! – சம்பந்தன் ஆக்ரோஷம்
சொன்னதை அரசு செய்யத்தவறின் ஐ.நா வே பொறுப்பேற்க வேண்டும்! – சம்பந்தன் ஆக்ரோஷம் “போர்க்குற்ற விசாரணைக்கான நீதிமன்றப் பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசு கூறிக் கொண்டிருப்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இலங்கை அரசு ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டவற்றை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவில்லையாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மையைப் – பெறுபேற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் […]
வாக்குறுதியையடுத்து முடிவுக்கு வந்தது பன்னங்கண்டி மக்களின் போராட்டம்!
வாக்குறுதியையடுத்து முடிவுக்கு வந்தது பன்னங்கண்டி மக்களின் போராட்டம்! கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று 15ஆவது நாள் முடிவுக்கு வந்துள்ளது. நேற்றுப் பிற்பகல் பன்னங்கண்டியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மக்களை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், காணி உரிமையாளர்களின் ஒருவரின் மகளான வைத்தியர் மாலதிவரன் மற்றும் காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை கலாநிதி யோசுவா ஆகியோர் சென்று […]
காத்தான்குடியிலும் டெங்கினால் 9 வயது சிறுமி பரிதாப மரணம்!
காத்தான்குடியிலும் டெங்கினால் 9 வயது சிறுமி பரிதாப மரணம்! மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடியில் டெங்குக் காய்ச்சலினால் சிறுமி ஒருவர் உரிழந்துள்ளார். புதிய காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த ஜி.பாத்திமா ஹதீஜா (வயது – 9) எனும் சிறுமியே நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று, குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றும் பயனில்லாததால், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுமியை சேர்த்துள்ளனர். காத்தான்குடி ஆதார […]
மஹிந்த, கோட்டாவை உடன் கைதுசெய்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்து
மஹிந்த, கோட்டாவை உடன் கைதுசெய்! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்து “மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் – கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில்தான் எமது உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். இதனை தற்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசும் வெளிப்படையாகக் கூறியுள்ளது. எனவே, மஹிந்தவையும், கோட்டாபயவையும் உடன் கைதுசெய்து கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு […]





