Other News

நான் வெறுப்பது யாரை? ஓவியா ஆர்மி பிடிக்காது? மனம் திறந்த ஓவியா

பிக்பாஸ் முடிந்தாலும் அனைவரும் எதிர்பார்ப்பதும், ரசிப்பதும் ஓவியாவைத்தான். இவருக்கான ரசிகர் கூட்டம் யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நீங்கள் வெறுக்கும் நபர் யார் என்ற கேள்விக்கு நான் யாரையும் வெறுப்பதில்லை. நான் என்னை நேசிப்பதால் அனைவரையும் நேசிக்கிறேன். எனக்கு யாராவது துரோகம் செய்தாலோ, கொலை செய்ய வந்தால் கூட எனது கோபம் அந்த நாளைக்கு மட்டும்தான் இருக்கும். மறுநாள் புதிய நாளாக இருக்கத்தான் விரும்புவேன் என்றார். […]

ஓவியாவை நான் ஏன் வெறுத்தேன்- காயத்ரி கூறும் பதில்

BiggBoss நிகழ்ச்சி மூலம் ஒரு சிலருக்கு மக்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் ஜுலி, காயத்ரி போன்றோர் இப்போதும் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றனர். தொடர்ந்து நிறைய பேட்டிகள் கொடுத்து வரும் காயத்ரி, அண்மையில் ஒரு பேட்டியில் BiggBoss அனுபவம் மற்றும் ஓவியாவை பற்றி கூறியுள்ளார். அதில் அவர், BiggBoss நிகழ்ச்சியில் நான் நீண்ட நாட்கள் இருக்க மாட்டேன் என்று எனது நண்பர்கள் கூறினார்கள். ஆனால் 2 மாதங்கள் நான் எப்படியோ தங்கிவிட்டேன். […]

பிக்பாஸ் குறித்து கேப்டன் விஜயகாந்த் கலக்கல் பதில்

கேப்டன் விஜயகாந்த் தற்போது மீண்டும் பரபரப்பாக பல மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகின்றார். இதில் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இதில் இவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கின்றீர்களா? என்று ஒரு கேள்வியை கேட்க உடனே கேப்டன் ‘பிக்பாஸுன்னா என்ன’ என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பிறகு சில நொடி கழித்து மீண்டும் ‘ஓ கமல் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றாரே அதுவா?, அதெல்லாம் பார்க்க நேரமில்லைப்பா, […]

தனது ரசிகர்களுக்கு ஓவியா வைக்கும் கோரிக்கை

தலைவி, டார்லிங் என பல பட்டப் பெயர்களுக்கு சொந்தக்கார நடிகை ஓவியா. BiggBoss நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து மிகவும் பரபரப்பாக படங்கள் ஒப்பந்தம் செய்வது, விளம்பரங்களில் நடிப்பது என பிஸியாக இருக்கிறார். தற்போது ஓவியா ஆர்மி ரசிகர்கள் சிலர் தங்களது தலைவியை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ஓவியா, ஜுலியை எதுவும் செய்யாதீர்கள், தயவுசெய்து எதுவும் செய்யாதீர்கள் ஓவியா ஆர்மி மக்களே என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வீடியோ தான் […]

அடுத்த தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: விஷால் அதிரடி

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க பொது செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆகிய பதவிகளை நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அடுத்த நடிகர் சங்க தேர்தல் பற்றி கேட்கப்பட்டது. அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்திமுடிக்கப்படும் என்றும், அதில் நிச்சயம் நானும் போட்டியிடுவேன் என விஷால் அப்போது தெரிவித்தார்.

இலங்கைப் படைகளுடனான பயிற்சி தொடரும்- அமெரிக்கா

அமெரிக்கா: இலங்­கைப் படை­க­ளுக்கு இடை­யி­லான கூட்­டுப் பயிற்சி போன்ற வாய்ப்­பு­கள் இன்­னும் அதி­க­ரிக்­கும் என்று அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. திரு­கோ­ண­ம­லை­யில் கடந்த 2ஆம் திகதி தொடங்கி நேற்­று­டன் முடி­வ­டைந்த, அமெரிக்கா – இலங்கைக் கடற்­ப­டை­க­ளுக்கு இடை­யி­லான முத­லா­வது ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி தொடர்­பாக அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­தினால் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அதில் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் துணைத் தூது­வர் ரொபேர்ட் ஹில்­டன், இலங்கை அரசு நல்­லி­ணக்­கம், நீதி மற்­றும் மனித உரி­மை­கள் போன்­ற­வற்­றில் தொடர்ந்து […]

சசிகலா, தினகரன் இருவரும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள்- ஓபிஎஸ் தரப்பு

சசிகலாவும், டிடிவி தினகரனும் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபோது டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினராகக் கூட இல்லை எனவும் தேர்தல் ஆணையத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது ஓபிஎஸ் அணி. அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் ஆகியோரின் தரப்பு தீவிரமாக போராடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மூட்டை மூட்டையாக பிரமாண பத்திரங்களை தாக்கல் […]

Narendra Modi

ஜி.எஸ்.டி வரி மாற்றத்தால் சீக்கிரமே வந்துவிட்டது தீபாவளி: பிரதமர் மோடி

ஜாம்நகர்: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள துர்காதீஷ் கோவிலுக்கு வழிபாடு நடத்த சென்றிருந்தார் பிரதமர் மோடி. இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கும் இவர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு குறித்து மக்கள் முன்னிலையில் பேசினார். இதில் அவர் ”ஜி.எஸ்.டி வரி விதி மற்றும் அதில் வந்திருக்கும் மாற்றங்கள் காரணமாக மக்களுக்கு சீக்கிரமே தீபாவளி வந்துவிட்டது” என தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். பிரதமராக மோடி […]

‘கெயில்’ திட்டம் ஸ்டாலின் எச்சரிக்கை

‘மீண்டும் கெயில் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய,- மாநில அரசுகள் முயற்சித்தால், விவசாயிகளுடன் இணைந்து, தி.மு.க., போராடும்’ என, அக்கட்சியின் செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில், விளை நிலங்களுக்கு இடையில், ‘கெயில்’ நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க, மத்திய அரசு முயற்சித்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரிஆகிய, ஏழு மாவட்டங்களில், விளைநிலங்களின் வழியாக, 310 கிலோ மீட்டர் துாரத்துக்கு, 20 மீட்டர் […]

மோடியை திருமணம் செய்ய ராஜஸ்தான் பெண் தர்ணா

புதுடில்லி, பிரதமர் மோடியை திருமணம் செய்வதற்காக, ராஜஸ்தானை சேர்ந்த பெண், டில்லியில், ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர், ஓம் சாந்தி சர்மா, ௪௦. பிரதமர் மோடியை திருமணம் செய்ய விரும்பி, டில்லி ஜந்தர் மந்தரில், ஒரு மாதத்துக்கும் மேலாக, தர்ணா போராட்டம் நடத்திவருகிறார்.இது பற்றி, சாந்தி சர்மா கூறியதாவது: […]