தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடியை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் படைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் சோதனை இரு சோதனை சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர், இந்த தாக்குதலில் 11 போலீசார் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திவிட்டு தலிபான் பயங்கரவாதிகள் தப்பிவிட்டனர் என கூறப்படுகிறது. இருப்பினும் போலீஸ் […]
Other News
இரணைமடுக் குளத்தின் துருசுக்கதவு சீரமைப்பு!!
இரணைமடுக் குளத்தின் வாய்க்காலில் வீழ்ந்த நீர்ப்பாசன துருசுக் கதவு சீரமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளரின் முயற்சியினால் கதவு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது – என விவசாயிகள் சம்மேளனத்தினர் தெரிவித்தனர். குளத்தின் இடதுகரை வாய்க்காலின் துருசுக் கதவுகள் இரண்டில் ஓர் கதவானது கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கழன்று வாய்க்காலுக்குள் வீழ்ந்தது. அவ்வாறு வீழ்ந்த கதவை மீட்டு சீர்செய்வதற்கு 15 நாள்களாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஒற்றைக் கதவின் மூலமே தண்ணீர் […]
ஓவியாவின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஆரவ் இருக்கலாம். ஆனால் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களின் மனதில் நின்ற ஒரே ஒருவர் ஓவியாதான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கு புகழ் அதிகமானதை போலவே சினிமா வாய்ப்புகளும் அதிகமாகி தற்போது அவர் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் ஓவியா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாட முடிவு செய்துள்ளார். […]
அரசால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும்; பாலிவுட் நடிகை சர்ச்சை பேச்சு
ஆணுறை விளம்பரங்களை பகல் நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை செய்ததை அடுத்து ஆணுறை விளம்பரங்களை நிறுத்தினால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும் என பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆணுறை விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் மத்திய அரசு ஆணுறை விளம்பரங்களை தொலைக்காட்சியில் பகல் நேரங்களில் விளம்பரம் செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆணுரை […]
நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி – 15 பேர் மாயம்
சிலி நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் இறந்தனர். மேலும், நிலச்சரிவால் மாயமான 15 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சிலி நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அங்குள்ள வீடுகள், மற்றும் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 11.4 செ.மீ மழை பெய்துள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிலியின் முக்கிய சுற்றுலா […]
லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு 8 ஆண்டுகள் சிறை
ரூ.500 லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு ஈரோடு நீதிமன்றம் 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டியாளையத்தில் மேக்லீன் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதன் ஆலோசகரான புஷ்பராஜ் ஆண்டுதோறும் இல்லத்தின் வரவு-செலவு கணக்கை சார் பதிவாளரிடம் ஒப்புதல் பெற்று, மாவட்ட பதிவாளரிடம் சமர்பித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சார் பதிவாளராக இருந்த தங்கவேல் என்பவரிடம் புஷ்பராஜ் வரவு […]
13 லட்சம் ரூபாய் செலவில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடமாலை
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு 13 லட்சம் ரூபாய் செலவில் வடமாலை அணிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் 18 அடி […]
நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கை சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நிலக் கண்ணிவெடித் தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வுடன்படிக்கையில் இன்னும் சேராத நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு அதனைப் பின்பற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் உஸ் தெரிவித்துள்ளார்.
புதுவிதமான காய்ச்சலால் முல்லைத்தீவில் 9 பேர் உயிரிழந்தனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாள்களுக்குள் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக 9பேர் உயிரிழந்தனர். திடீர் உயிரிழப்புத் தொடர்பில் கொழும்பு அரசின் மருத்துவக் குழு முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. முல்லைத்தீவு நகரப் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்தக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். தொடர்ச்சியான காய்ச்சலின் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 9 பேரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. கொழும்பு […]
பெரியபாண்டியன் கொலை வழக்கில் சக ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரியபாண்டியன் வழக்கை தீவிரமாக ராஜஸ்தான் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் பாலி மாவட்ட காவல்துறை அதிகாரி பார்கவி, ‘பெரியபாண்டியனின் உடலை துளைத்தது சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு’ என்று கூறி அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, ‘பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்த்ரன் போலீசார் […]





