Other News

ஜனவரி 15 இல் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியை தெரிவு செய்யும் நோக்கில் பயிற்சிப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்கு உட்பட்ட வீரர்கள், உள்ளுர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்று புதிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்ஹ தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சிப் பிரிவுக்காக தற்போது தேசிய மட்டத்தில் முன்னணியில் இருக்கும் 23 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவின் ஊடாக வீரர்களைப் பயிற்றுவிக்கும் பணிகள் எதிர்வரும் […]

சிங்­கப்­பூரு­டன் இனி­மேல் கட்­டுப்­பா­டற்ற வர்த்­த­கம்

சிங்­கப்­பூர் தலைமை அமைச்­சர் லீ சின்­லுத் ஜன­வரி மாதம் இலங்­கைக்கு வரு­கை­ த­ர­வுள்­ளார். சிங்­கப்­பூ­ருக்­கும், இலங்­கைக்­கும் இடை­யி­லான கட்­டுப்­பா­டு­கள் இல்­லாத வர்த்­தக உடன்­ப­டிக்கை ஒன்று அப்­போது கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்த அழைப்­பை­யேற்று அவ­ரின் பய­ணம் இடம்­பெ­ற­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க் கட்­சித் தலை­வர் ஆகி­யோரை சிங்­கப்­பூர் தலைமை அமைச்­சர் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்­ளார். நல்­லாட்சி அரசு அமைய […]

போதைப்­பொ­ருள் மைய­மாக மாறி­விட்­டது இலங்கை!

போதைப்­பொ­ருள் மைய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ள­தாக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குற்­றஞ் சுமத்­தி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, அன்று தேயிலை கைத்­தொ­ழில் துறை­யில் உலகப் பிர­சித்தி பெற்­றி­ருந்த இலங்கை இன்று போதைப்­பொ­ருள் வர்த்­த­கத்­தின் ஊடாக உலகப் பிர­சித்தி பெற்­றுக்­கொண்­டுள்­ளது. தற்­பொ­ழுது இலங்­கை­யில் போதைப்­பொ­ருள் பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யும் கேந்­திர நிலை­ய­மாக இலங்கை மாற்­ற­ம­டைந்­துள்­ளது. சதொச நிறு­வ­னத்துக்குச் சொந்­த­மான லொறி­க­ளி­லும் போதைப்­பொ­ருள் விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­கின்­றது. கொள்­க­லன்­க­ளில், லொறி­க­ளில் போதைப்­பொ­ருட்­கள் […]

ஜனாதிபதி

எல்லோா் மீதும் காட்டும் இரக்கமும், கருணையும் வெற்றியைத் தரும்!

மனித நேயத்தை முன்னிலைப்படுத்திய உலக பண்டிகையான நத்தார் கொண்டாட்டங்களுடன் இணைந்து, நம் நாட்டின் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எனது நத்தார் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தெய்வீகத் தன்மையும் மனிதாபிமானமும் சந்தித்துக் கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்டிகை மானிட வரலாற்றில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது என்றும் அவர் […]

கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜயகாந்த்

சென்னை சைதாப்பேட்டை தேவாயலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் கிறிதுமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிராத்தனை செய்தார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் தேறியதால் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த விஜயகாந்த், இன்று கிறிஸ்துமஸ்சை முன்னிட்டு சென்னை, சைதாப்பேட்டை தேவாயலத்தில் தனது மனைவி பிரேமலதாவுடன் சென்று பிரார்த்தனை செய்தார். பின்னர் தேவாலய வளாகத்தில் […]

கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பேருந்து விபத்தில் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆகோ நகரில் பேருந்து விபத்துக்குள்ளானதில் கிறிஸ்துமஸ் பிராத்தனைக்கு சென்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஆகோ நகரைச் சேர்ந்த சிலர் மனோவோக் நகரிலுள்ள தேவாலயத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராத்தனையில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். புறப்பட்டு சில மணிதுழியில் எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

முதல்வருக்கு பாராட்டுகள்

தினகரன் ஒரு மாயமான் – ஓபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினகரன் ஒரு மாயமான் என்று கூறியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தினகரன் ஆதரவு மாவட்ட […]

தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் நீக்கம்!

அதிமுக சார்பில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள மாவட்ட செயலாளர்களை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து இன்று தற்போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தினகரனுக்கு ஆதரவாக உள்ள மாவட்ட […]

ஆவா குழுவை உருவாக்கியது புலிகளல்ல!

யாழ்ப்பாணத்தில் தற்போது உருவாகியிருக்கும் ஆவா குழுவுக்கும் புலிகளுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என யாழ்.பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.டி.கே. ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ‘ வடமாகாணத்தில் தற்போது விடுதலைப்புலிகள் இல்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின் விடுதலைப்புலிகள் இலங்கையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்திய திரைப்படங்களின் தாக்கம் மற்றும் மதுபாவனை, போதைப்பொருள் பாவனை என்பவற்றாலேயே ஆவா குழு உருவாகியுள்ளது. இவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்புகள் இல்லை என […]