Other News

ஹரிஷ் இவருடன் நெருக்கமாம்.!

பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பிரபலமானவர்கள் தான் ஹரிஷ், பிந்து மாதவி மற்றும் ரைசா. ஹரிஷ் மற்றும் ரைசா இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து, பிந்து மாதவி தற்போது புகழேந்தி எனும் நான் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். பிந்து மாதவி மற்றும் ஹரிஷ் சமீபத்தில் தான் கோவிலுக்கு சென்று வந்தார்கள். இவர்களது […]

கைதிகளான ஐந்து பிக்பாஸ் பிரபலங்கள்

பிரபல முன்னணி தொலைக்காட்சியில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிரபலமாகி விட்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் படங்கள், விளம்பரங்கள், கடை திறப்பு, சிறப்பு விருந்தினர் என தொடர்ந்து பண மழையில் நனைந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஓவியா, ஜூலி, சினேகன், ரைசா, சுஜா ஆகியோரை வைத்து சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த பிரபல நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாம், அதற்காக இவர்களும் […]

பெரிய பாண்டியனை சுட்டது முனிசேகர்தான்

சென்னை கொளத்தூரை சேர்ந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனை, அவருடன் சென்ற முனிசேகர் தவறுதலாக சுட்டது உறுதியாகியுள்ளது. சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை காவல்துறை ஆணையாளர் பெரியபாண்டி சுட்டு கொல்லப்பட்டப்பட்டார். அவருடன் சென்ற முனிசேகர் காயமைடந்தார். தினேஷ் சவுத்ரி, நாதுராம் ஆகிய கொள்ளையர்களும் பெரிய பாண்டியை சுட்டுக் கொன்று விட்டு தப்பி விட்டதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், பெரிய பாண்டியனுடன் சென்ற […]

இன்றைய ராசிபலன் 27.12.2017

மேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாழ்வுமனப் பான்மை வரக்கூடும். வழக்கில் நிதானம் அவசியம். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து விலகும். இரவு 8.39 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள். ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். மனைவிவழியில் ஆதரவு கிட்டும். […]

ஆம்புலன்ஸில் மது; பெல்லி டான்ஸ்; சர்ச்சையை ஏற்படுத்திய மருத்துவ கல்லூரி விழா

உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சந்திப்பு விழாவில் பெல்லி டான்ஸ் நடைபெற்றது மற்றும் மருத்துவமனை ஆம்புலன்ஸில் மது கொண்டு வரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா லாஜ்பாத் ராய் மருத்துவ கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா கொண்டாடப்பட்டுள்ளது. அதில், 1992ஆம் பேட்ஜ் படித்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஷ்ய பெல்லி டான்ஸ் நடைபெற்றுள்ளது. மேலும் மருத்துவமனை ஆம்பூலன்ஸ் […]

அதிமுக கூட்டத்தில் பங்கேற்காத 5 அமைச்சர்கள்

அதிமுக நடத்திய கூட்டத்தில் 5 அமைச்சர்கள் பங்கேற்காத விவகாரம் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல், இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு கூறி வருகிறது. மேலும், […]

ஓரை அறிந்து நடந்தால் வெற்றி கிடைக்கும்; சித்தர்கள் கூறுவதென்ன…!

ஓரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது. பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய […]

ஆர்.கே.நகர் தேர்தல் : எங்கே நடந்தது தவறு?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே வாங்கி டெபாசிட் இழந்து தோல்வியை சந்தித்தது திமுகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுகவில் பலமான ஒற்றைத் தலைமை இல்லை. எடப்பாடி – ஓபிஎஸ்- தினகரன் என மூன்று தலைமைகளாக அதிமுக பிரிந்தது. அதன்பின் எடப்பாடி – ஓபிஎஸ் அணி ஒன்றாக சேர்ந்தது. ஆனால், தினகரன் தனி அணியாக பிரிந்தார். இந்த நிலையில்தான் ஆர்.கே.நகர் […]

இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி

கடந்த வாரம் பாகிஸ்தான் நடந்ததிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தற்பொழுது இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் இறந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் சார்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ மேஜர் உள்பட […]