Other News

புதுக்­கு­டி­யி­ருப்­பில் அரச தலை­வ­ரின் கட்­ட­வுட் தீக்­கிரை!!

புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்­தில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி வேட்­பா­ளர் அலு­வ­ல­கம் ஒன்­றில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த அர­ச­த­லை­வ­ரின் படம் பொறிக்­கப்­பட்ட விளம்­பரப் பதாகை இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளி­னால் தீயிட்டு எரிக்­கப்­பட்­டுள்­ளது. சம்­ப­வ­வம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது: புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­ச­சபை தேர்­த­லில் மல்­லி­கைத்­தீவு, மந்­து­வில், சிவ­ந­கர் மற்­றும் ஆனந்­த­பு­ரம் போன்ற கிரா­மங்­களை ஒன்­றி­ணைத்த புனி­த­வ­ள­ந­கர் 6ஆம் வட்­டா­ராம் தேர்­தல் தொகு­தி­யில் சுதந்­தி­ர­க் கட்­சி­யின் வேட்­பா­ள­ராக அ.பர­ம­தாஸ் என்­ப­வர் போட்­டி­யி­டு­கின்­றார். இவர் தனது தேர்­தல் பரப்­பு­ரைக்­காக கட்சி அலு­வ­ல­கம் ஒன்றை […]

அறு­வ­டை­செய்த நெல்லை சாலை­க­ளில் உல­ர­வி­டும் மாங்­குளம் விவ­சா­யி­கள்!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் மாங்­கு­ளம் பிர­தே­சத்­தில் அறு­வடை செய்­யும் நெல்லை உலர வைப்­ப­தில் விவ­சா­யி­கள் சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். மாங்­கு­ளம் பகு­தி­யில் நெல்லை உல­ர­வைக்­கும் தளங்­கள் இல்­லாத கார­ணத்­தால் இவ்­வாறு நெல்லை சாலை­க­ளில் கொட்டி உல­ர­வைக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. சாலை­ய­ரு­கில் நெல்­லைக் கொட்­டு­வ­தால் போக்­கு­வ­ரத்­துக்கு சிர­மம் ஏற்­பட்­டுள்­ளது. வாக­னச் சார­தி­கள் முகம்­சு­ளிக்­கின்­ற­னர் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வன்னி மாவட்­டத்­தில் தற்­போது கால­போக அறு­வடை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஆங்­காங்கே மழை பெய்து வந்­தா­லும் விவ­சா­யி­கள் […]

3 வயதுக் குழந்தை வெட்டிக் கொலை

கோடாரியால் வெட்டியதில் மூன்று வயது பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுடன், கொலையாளி தானும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று காலை யாழ்.வண்ணாா் பண்ணை பகுதியில் இடம்பெற்றது. வண்ணாா் பண்ணை பத்திரகாளி வீதியில் உள்ள குணரத்தினம் என்பவருடைய வீட்டிலேயே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், கொலையாளியின் தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் […]

ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடித்துரைத்துள்ளது. ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்கள் குடும்பத்தில் மனக் கஷ்டம், பணக்கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும். இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். இறந்தவுடன் இறந்தவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், இறந்தவரின் திதி தோறும் அவருக்குரிய கடமைகளை […]

வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க தடை

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கங்கணம் கட்டிக்கொண்டு வைரமுத்துவுக்கு எதிராக களத்தில் இறங்கியது. எப்போதும் இல்லாத அளவுக்கு ஜீயர்கள் போராட்டத்தில் குதித்தனர். வைரமுத்துவுக்கு எதிராக ஆபாச வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. அவருக்கு பொதுக்கூட்டங்களில் கொலை மிரட்டல் […]

முதல்வருக்கு பாராட்டுகள்

கமலும் ரஜினியும் சோளக்காட்டு பொம்மைகள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் அரசியல் களத்தில் புதிய கட்சியுடன் களமிறங்கவுள்ளனர். மேலும் விஷால் மற்றும் விஜய் எந்த நேரமும் களமிறங்க காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி பாக்யராஜ் உள்பட இன்னும் ஒருசிலரும் அரசியலில் நுழைய சரியான நேரத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் ஒருசிலர் புதிய கட்சி தொடங்குகின்றனர் என யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் சோளக்காட்டு பொம்மைகள் […]

சிறுமியை பாலியல் அடிமையாக்கிய பெற்றோர்

ரஷ்யாவில் தனது சொந்த மகளை பெற்றோர்கள் பாலியல் அடிமையாக நடத்தி வந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 வயதான சிறுமியை கடந்த ஒரு வருடமாக அவளது பெற்றோர்கள் பாலியல் அடிமையாக வைத்து துன்புறுத்தி வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவளது பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதவிடாய் கோளாறு காணமாக மருவத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குறித்த சிறுமியை, மருத்துவர்கள் பரிசோதித்த போது அந்த சிறுமி கன்னித்தன்மையை இழந்து […]

ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவுதான் அவர்களுக்கு

தினகரன் அணியில் உள்ள நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஆரல்வாய்மொழியில் பேசினார். அப்போது அவர் தினகரனுக்கு இளஞர்கள் ஆதரவு இருப்பதாக பேசினார். மதிமுகவில் இருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொள்கை பரப்பு செயலாளர் ஆனார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணியில் இருக்கும் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக உள்ளார். பொதுக்கூட்டங்கள் போட்டு மேடைதோறும் டிடிவி […]

ஒரே கொடியின் கீழ் இரண்டு பகை நாடுகள்!

இரண்டு பகை நாடுகளுக்கு இடையே சமரசம் ஏற்படும் மற்றொரு அறிகுறியாக, அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு வட மற்றும் தென் கொரியாவை சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறும் ஒரே பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு அணியை உருவாக்குவதற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. வட மற்றும் தென் கொரிய விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஐக்கிய கொரியாவின் ஆதரவு கொடியை ஏந்திக்கொண்டு, ஒன்றாக சேர்ந்து இந்த விளையாட்டில் கலந்துகொள்ளவும் அமைதி கிரமமான […]

தமிழிசை

வைரமுத்து மன்னிப்பு கேட்டது பத்தாது

ஆண்டாள் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்டது பத்தாது என்றும், அவர் மேலும் ஒரு முறை மக்களிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கவிஞர் வைரமுத்து வைணவ பெண் கடவுள் ஆண்டாள் பற்றி தவறான வார்த்தையை குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் […]