Other News

அன்பெனும் மழையில் நனைந்தேன் – இளையராஜா நெகிழ்ச்சி

பத்மவிபூஷன் விருது தனக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தன்னை வாழ்த்திய நபர்களுக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது இளையராஜாவிற்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இசை துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் “எனக்கு […]

தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி வழங்கிய ஸ்டாலின்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக் கழகத்தில் 3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழியான தமிழுக்கு தனி […]

திடீர் ராணுவ அணிவகுப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ராணுவ அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் உலக நாடுகள் டிரம்ப்-பின் ஆளுமை போக்கு புரியாமல் உள்ளனர். அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் வட கொரியா, தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒளிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள்வுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா என கூறப்பட்டாலும், இரு நாடுகளுக்கு மத்தியில் அமைதி சூழல் திரும்பவில்லை. இந்நிலையில் […]

இன்றைய ராசிபலன் 08.02.2018

மேஷம்: காலை 11.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள். ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும் வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் […]

விஜய் தலைக்கனம் பிடித்தவரா? நந்தினி கூறும் அதிர்ச்சி தகவல்…!!

பிரபல தொலைக்காட்சியில் மௌன ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நந்தினி என்கிற தமிழ்செல்வி. இவர் சீரியலை தாண்டி மெட்ராஸ், மெர்சல், ஜில்லா, வேதாளம் என பல படங்களில் நடித்திருக்கும் இவர் அஜித், விஜய்யுடன் படப்பிடிப்பில் இருந்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். விஜய் பற்றி பேசும்போது, அவர் பேசவே மாட்டார், தலைகனம் பிடித்தவர் என்று பலர் கூறினார்கள். ஜில்லா படப்பிடிப்பில் எனக்கு நிறைய காட்சிகள் மிகவும் பொறுமையாக […]

மாதுளை எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப், மாதுளை பழம் – 1, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு. தாளிக்க : கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயம் […]

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி ஜெயரட்னம் !

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது. அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும் Centennial கல்லூரியின் பேராசிரியராக பணியாற்றுகிறார். மேலும் சமூக நீதி பற்றி மாணவர்களுக்கும் சமுதாய பங்குதாரர்களுக்கும் தேவையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார். […]

தைய்வானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 2 பேர் பலி

தைவான் தலைநகர் தைபேயில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் குடியிருப்புகள் இடிந்து விழுந்து 2 பேர் பலியாகினர் மேலும் 114 பேர் காயமடைந்துள்ளனர். தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே தைவானில் லேசான நில நடுக்கம் உணரப்பட்ட நிலையில், தற்பொழுது 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீட்டிலிருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். […]

மக்களவையில் கடும் கோபத்தில் பேசி வருகிறார் மோடி

இன்று தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பிரதமர் மோடி கடும் கோபத்தில் பேசி வருகிறார். இந்த வருடத்தின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. அதன் பின்னர் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று தொடங்கிய கூட்டத்தில் பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் […]

பெண்களின் உள்ளாடையை திருடும் புத்த துறவி

தாய்லாந்தை சேர்ந்த புத்த துறவி ஒருவர் பெண்களின் உள்ளாடைகளை திருடி செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்த் Suphaburi பகுதியில் வசித்து வருபவரின் வீட்டில் பெண்களின் உள்ளாடைகள் தொடர் காணாமல் போனது. இதனால் இதனை திருவது யார் என்பதை கண்டுபிடிக்க துணிகளை காயப்போடும் இடத்தில் சிசிடிவி பொருத்தப்பட்டது. பதிவான சிசிடிவி காட்சியில் புத்த துறவி ஒருவர் உள்ளாடைகளை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த […]