பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அழுத்கமகே, “பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டு எதிரணி ஆதரவு வழங்கும். இந்தப் பிரேரணைவரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். முன்னதாகஇ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையைக் […]
Other News
ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் சிறிலங்கா வருகிறார்
ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம் தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 4ஆம் நாள் தொடக்கம்இ 7ஆம் நாள் வரை இவர் சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் இந்தப் பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் […]
ரணிலுக்கு எதிரான பிரேரணை ; மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானத்தை எடுப்போம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டால் அதற்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக தெரிவித்தார். பிரதமரின் ஆட்சியின் குறைப்பாடுகளையும்இ அவர் ஊழல் வாதிகளுக்கு பாதுகாப்பளித்துள்ளார் என்ற நியாயபூர்வத்தின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் மாறாக அரசியல் அபிலாஷைகளை இலக்காக கொள்ளும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்க மாட்டோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் […]
இரண்டு வாரத்துக்குள் ஐ.தே.மு. அரசின் அதிரடியான மாற்றங்கள்
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசில் அடுத்த இரண்டுவாரங்களில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கவின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. மூன்று பிரதாக அறிக்கைகள் மற்றும் முழு நாட்டிலும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள யோசனைகளுக்கு அமையாக இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய ஐ.தே.கவின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தில் அரசு துரிதமாக மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்திட்டங்கள் குறித்த அறிக்கை இன்று […]
இன்றைய ராசிபலன் 02.03.2018
மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே.மயில் நீலம். ரிஷபம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை […]
சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்
சிரியாவில் அரச படைகள் நடத்திவரும் கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும் அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கில் வாழும்இ தமிழ்இ முஸ்லிம் மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போதுஇ சிரியாவின் கிழக்கு ஹௌட்டாவில் இடம்பெற்று வரும் மனித படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும்இ அங்கு உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட […]
காணாமல்போனோர் பணியகம் : நல்லிணக்கத்திற்கு முதல்படி அமெரிக்கா தூதுவர்
சுயாதீனமான மற்றும் வலுவான காணாமல்போனோர் தொடர்பான பணியகம் நிறுவப்படுவது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கும் தமது அன்புக்குரியவர்களை தேடுபவர்களுக்கு ஒரு முன்னோக்கிய படியாகும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள அவர், சுயாதீனமான மற்றும் வலுவான காணாமல்போனோர் தொடர்பான பணியகம் நிறுவப்படுவது இலங்கை மக்களின் சமாதானம்இ நல்லிணக்கம்இ பொறுப்புக்கூறல் மற்றும் மீள்நிகழாமை என்பனவற்றுக்கும்இ விசேடமாக […]
புதிய சட்டம், ஒழுங்கு அமைச்சர் அடுத்தவாரம் நியமனம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக பொறுப்பேற்றுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு அடுத்த வாரம் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் நடந்த கலவரமான நிலைமையை கட்டுப்படுத்துவதில் பிரதமர் தலையீடுகளை மேற்கொண்டதால் புதிய அமைச்சரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு ஐக்கிய தேசியக்கட்சிக்குரிய அமைச்சு பொறுப்பு என்பதால் அடுத்த வாரம் புதிய அமைச்சர் […]
இறைவன்
வாசம் வீசா எந்தன் வரியினில் மூழ்கிய வடா மலர்களைக் கொண்டு நாள்தோறும் நான் ஒரு பாமாலையை பூமாலை என தொடுக்க யாவரும் கைக் கூப்பி வணங்கும் இறையடிச் சேர்க்க என் உள்ளும் வெளியும் அமைதியுற எந்தன் எண்ணம் எல்லாம் வண்ணம் ஆக்கிடல் வேண்டியே ஓயாது இது…..!
ரணிலுக்கு எதிராக மைத்திரி பிறப்பித்துள்ள மற்றுமொரு உத்தரவு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இயங்கி வந்த பொருளாதார முகாமைத்துவ குழுவினால், எந்த பயனும் இல்லை என்பதால், அதனை கலைக்க வேண்டும் என ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார். பொருளாதார முகாமைத்துவ குழுவை கலைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள ஜனாதிபதி, குழுவின் மூலம் கடந்த காலம் முழுவதும் எடுத்த முடிவுகள் தோல்வியடைந்துள்ளமை குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி முன்வைத்த இந்த […]





