Other News

பொன்சேகா

சரத் பொன்சேகாவுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டால் தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்?

சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் நீதித்துறை சார்ந்த அமைச்சு பதவி வழங்கப்படும் போது தமிழர்களின் நிலை கேள்விக்குரியாகிவிடும் என்ற அச்சம் தோன்றியுள்ளதால் இதனை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ள […]

தமிழர்களுக்கு எதிராக இனவாத செயற்பாட்டில் மஹிந்த!

காணாமல் போனோர் பணியகத்திற்கு ஆணையாளர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். காணாமல் போனார் பணியகத்திற்காக ஆணையாளர் நியமிக்கப்பட்டமையின் ஊடாக அரசாங்கம் காட்டிகொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் காட்டி கொடுப்பு வேலைத்திட்டங்கள் மீண்டும் இதன் ஊடாக தெளிவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். இந்த கருத்தின் […]

பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு வழங்க திட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள 682ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறுவதற்கு மாற்று காணிகள் வேண்டும் என்றும், அவற்றை எழுத்தால் எழுதி வழங்கவேண்டும் என்றும் இராணுவத்தளபதி ஒருவர் கோரிக்கை […]

இன்றைய ராசிபலன் 03.03.2018

மேஷம்: சமயோஜிதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். […]

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும், பொலன்னறுவை, அம்பாறை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தை தவிர அனைத்து பிரதேசங்களிலும் மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மதியம் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சில பிரதேசங்களில் 100 […]

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள பிரதமரின் அவசர சிங்கப்பூர் விஜயம்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அவசர சிங்கப்பூர் விஜயம் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது. பிரதமரின் இந்த விஜயத்தின் பின்னர் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இருக்கும் இடத்தை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கேட்டு அறிந்து கொள்ளலாம் என குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகலகந்தே சுதத்த தேரர் கூறியுள்ளார். அத்துடன், பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஜனாதிபதி செயற்படும் விதம் […]

இரண்டாய் பிளவுபட்ட தமிழ் மக்கள் பேரவை: வலுக்கும் உள்முரண்பாடுகள்!

தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் பேரவை உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஏனைய பேரவை உறுப்பினர்களுக்கும் இடையே இவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டதாக உள்மட்ட தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை, பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பலர் கூட்டம் முடிந்தும் இறுகிய முகங்களுடன் வெளியேறியதை அவதானிக்க முடிந்தது. பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துக்கள் எதனையும் வெளியிட மறுத்த அவர்கள், வேகமாக […]

சென்னையில் கமல்ஹாசனின் முதல் பொதுக்கூட்டம்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதனையடுத்து ஆன்லைன் மூலம் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் கட்சியில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி திருச்சியில் அடுத்த பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறும் என்று கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார். ஆனால் […]

இது திட்டமிட்ட என்கவுண்டர்

நேற்று மதுரையில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இந்த என்கவுண்டர் ஒரு திட்டமிடப்பட்ட சம்பவம் என முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரைச்செல்வி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். முத்து இருளாண்டியின் மற்றும் சகுனி கார்த்திக் இருவரையும் போலீசார் ஆஜராக கூறியதாகவும், அதன்பேரில் இருவரையும் அழைத்த வந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு போலீசார் கொன்றுவிட்டதாகவும் சகோதரி சித்திரைச்செல்வி அந்த […]

உதவி பொருட்களுக்கு பதில் உடலுறவு

சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை சிரியா அரசும், ரஷ்ய படையும் கடுமையான தாக்கி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சிரியாவில் பாதிக்கபட்டவர்களுக்காக ஐநா உதவிக்குழு ஏராளமான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அந்த உதவி பொருட்களை கொண்டு சென்ற குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடலுறவு […]