தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பித்து கொள்கை பற்றுடன் செயற்படுவாராக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை வரவேற்கும் என அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளாா். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிக் கட்சி ஒன்றை உருவாக்க உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக கேட்டபோதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் அவர் […]
Other News
பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி. சேகர் தலைமறைவு?
பெண்களை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி. சேகர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம் முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் […]
எஸ்.வி சேகர் பத்திரிக்கையாளர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் – இயக்குநர் பாரதிராஜா அதிரடி
பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய எஸ்.வி சேகர் பத்திரிக்கையாளர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம் முன்பும் முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், யாரையும் […]
தற்காலிக வீடுகள் கூட இல்லாத கோயில்காடு மக்கள்!!
கடந்த இரண்டு வருடங்களாக தற்காலிக வீடுகள் கூட இன்றி மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருவதாக இத்தாவில் கோயில்காடு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாவது: கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமமே இத்தாவில் கிராமம். குறித்த கிராமத்தில் உள்ள ஒரு பகுதியே கோயில்காடு பகுதி. குறித்த பகுதியில் பிரதேச செயலகத்தால் அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டு காணி இல்லாத மக்கள் […]
ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!!
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சு கடந்த வாரம் […]
முல்லைத்தீவில் மொழிப் பிரச்சினையால் நோயாளர் அசௌகரியம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கடமையாற்றுவதால், நோயாளர்கள் மொழிப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றார்கள். இதே மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் பலர் இங்கு கடமையாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வடமாகாண சுகாதார அமைச்சரிடம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை மருத்துவமனையின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குண சீலன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அமைச்சருக்கு இந்த […]
இன்றைய ராசிபலன் 22.04.2018
மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் வெளியில் சென்றுவருவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் […]
மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் : எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோ
சமீபத்தில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அந்த பதிவில் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவு படுத்தும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பத்திரிக்கையாளர் சங்கங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன. மேலும், அவரது வீட்டின் மீது கற்களை வீசியும் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், யாரையும் காயப்படுத்தும் எண்ணம் தனக்கில்லை என அவர் பேசியுள்ளார்.
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலியப் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். 1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று […]
ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 20 அப்பாவி பொதுமக்கள் பலி
ஏமன் நாட்டின் டைஸ் பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான […]





