Other News

வேற்றுகிரகவாசி போல் மாறிய வாலிபர்

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பல அபாய நடைமுறைகளை பின்பற்றி வேற்றுக்கிரகவாசிகளைப் போல் தன்னை மாற்றிகொண்டு வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த வின்னி ஒ (22) 110 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து தன்னை வேற்றுக்கிரகவாசியை போல் மாற்றிக்கொள்ள முயன்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் முழுமையான வேற்றுக்கிரகவாசியாக மாற அசைப்பட்டு அவரது பிறப்புறுப்பையும் நீக்கியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தன்னுடைய 17 வயதில் இருந்தே இந்த முயற்சியை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் […]

அ.தி.மு.க.வும் பா.ஜனதாவும் இரட்டை குழல் துப்பாக்கி அல்ல- தம்பித்துரை

பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் தான் முடிவு எடுக்கும். நான் அது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அம்மா எப்படி கட்சியை நடத்தினார்கள், எப்படி தனித்துவத்தை காண்பித்தார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தனிக்கட்சியாகத்தான் பாராளுமன்றத்தில் […]

வாயை திறக்காதீங்க!: பிரதமர் மோடி உத்தரவு

புதுடில்லி: ”தேவை இல்லாத விஷயங்களை பேச வேண்டாம்,” என, பா.ஜ.,வை சேர்ந்த சர்ச்சைக்குரிய தலைவர்களுக்கு, பிரதமர், நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். சர்ச்சையாக பேசுவதால், ஊடகங்களுக்கு தேவை யான, மசாலாக்களை நாம் அள்ளித் தருகிறோம். சிறந்த சமூக விஞ்ஞானிகள்,நிபுணர்களாக நினைத்து, கேமராக்கள் முன், நீங்கள் பேசும் வார்த்தைகள், கடும் விமர்சனத்துக்கு ஆளாகின்றன. இதனால், கட்சியின் புகழுக்கு பாதிப்புஏற்படுகிறது. இத்தகைய பேச்சுக்களை, பா.ஜ., – எம்.பி.,க்கள், தலைவர்கள் தவிர்க்க வேண்டும். ஊடகங்களில், அங்கீகாரம் […]

முல்லைக் கடலில் கண்டெடுக்கப்பட்ட விசித்திரச் சங்கு

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது இந்தச் சங்கு கண்டெடுக்கப்பட்டது. சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி ஒரு பறவை போன்று விசித்திரமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீன மாணவர்கள் இந்தியும் இந்திய மாணவர்கள் மாண்டரின் மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் – சுஷ்மா சுவராஜ்

‘ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு’ நாடுகளின் மாநாடு சீனாவின் குயிங்டோ நகரில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு பீஜிங்கில் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். இந்தநிலையில்,பீஜிங்கில் நடைபெற்ற இந்திய சீனாவிற்கு இடையே ஹிந்தி பங்களிப்பு குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: […]

தமி­ழ­ரின் கை தவ­றிப் போனால் இந்­தி­யா­வின் பாது­காப்புக்கு ஆபத்து

தமி­ழ­ரின் தாயக பூமி­யான, வடக்கு– – கிழக்கு மாகா­ணம் தமி­ழ­ரின் கையை விட்­டுச் சென்­றால் இந்­தி­யா­வின் பாது­காப்பு கேள்­விக் குறி­யா­கும். இந்­தப் பேரா­பத்தைக் கருத்­திற் கொண்டு – கரி­ச­னை­யில் எடுத்து இந்­திய அரசு தமது அய­லு­ற­வுக் கொள்­கை­யில் மாற்­றங்­களை உட­ன­டி­யா­கக் கொண்டு வர­வேண்­டும் என்று ஈபி­ஆர்­எல்­எப் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார். இந்­தி­யப் பத்­தி­ரி­கை­யா­ளர் தி.ராம­கி­ருஸ்­ணன் எழு­திய ‘ஓர் இனப்­பி­ரச்­சி­னை­யும் ஓர் ஒப்­பந்­த­மும்’ என்ற நூல் அறி­முக விழா […]

நாடு திரும்பினார் அரச தலைவர் மைத்திரி

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த 15 ஆம் திகதி லண்டன் சென்றிருந்தனர்.

வடமாகாண சபை

ஊழல், மோசடியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு மாகாண சபை­யின் ஆளு­கைக்­குட் பட்ட அமைச்­சுக்­கள், திணைக்­க­ளங்­கள் ஆகி­ய­வற்­றில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யின் பரிந்­து ரை­களை விரைந்து – சபை­யின் ஆயுள் காலத் துக்­குள் – எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் 25ஆம் திக­திக் குள் நிறை­வேற்­று­மாறு எதிர்­வ­ரும் வியா­ழக் கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள மாகாண சபை அமர் வில் தீர்­மா­னம் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. நிதி மோச­டி­கள், அதி­கார முறை­கே­டு­கள் உள் ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் காலத்­துக்குக் […]

கர்நாடக அரசியலை கலக்கும் நடிகைகள்

தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி ஆகிய படங்களில் நடித்துள்ள கன்னட நடிகை ரம்யா கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2013-ல் மாண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அதே தொகுதியில் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் தோல்வி அடைந்தார். தற்போது காங்கிரஸ் தொழில் நுட்ப பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். பிரபு சாலமன் இயக்கிய கொக்கி […]

சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் கணவர் ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர். சமந்தா, விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் 1950 […]