பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வட.மாகாண முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தவராசா உட்பட மூவர், தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விண்ணப்பித்து […]
Other News
யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்
யாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை […]
இராணுவ அதிகாரி விவகாரம்? கடுப்பில் கோத்தபாய
யுத்த வெற்றிக்காரணமான இராணுவ தளபதியொருவரை மாலியிலிருந்து திருப்பி அழைக்கவேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளமை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில்கூட இலங்கையால் ஐநாவின் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இராணுவத்தினரை அனுப்ப முடிந்தது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது அவ்வாறான நிலையில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் ஆதரவு இலங்கைக்கு உள்ளதென்றால் […]
இன்றைய ராசிபலன் 22.10.2018
மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள். ரிஷபம்: சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்துக் கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். […]
இன்றைய ராசிபலன் 21.10.2018
மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வேற்று மதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். மிதுனம்: […]
முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்.!
தமிழர்களின் அதிகார்பபூர்வ பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களது உடலங்கள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமிலங்கள் 2018 நவம்பர் 27 மாவீர் நாளினை முன்னிட்டுசிரமதான பணிகள் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றன அதனடிப்படையில் தமிழீழத்தின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் பணியில் மக்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளனர் அந்தவவையில் இன்று 20.10.18 அன்று காலை 8.30 மணிக்கு வட தமிழீழம் முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள மாவீரர் […]
ஐ.நா திருப்பியனுப்பிய இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்பட வில்லை
ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ள இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்படவில்லை என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி போர் குற்றச்சாட்டுகளுக்குள்ளனவர் என்பதாலேயே திருப்பி அனுப்பியதாக ஐ.நா பொதுச்செயளாலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைதி காக்கும் படையில் மாலியில் பணியாற்றிய லெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுர […]
தாத்தாவின் சாம்பலில் பிஸ்கட் தயாரித்து நண்பர்களுக்கு கொடுத்த மாணவன்
கலிபோர்னியாவில் டேவிஸ் நகரை சேர்ந்த பள்ளி சிறுவனின் தாத்தா சமீபத்தில் இறந்து போனார். அவரது உடல் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் அந்த சிறுவன் எரியூட்டப்பட்ட தனது தாத்தாவின் சாம்பலை எடுத்து அதை வைத்து பிஸ்கட்டை தயாரித்துள்ளான். அத்தோடு நிறுத்தாமல், அந்த பிஸ்கட்டை தனது நண்பர்களுக்கும் கொடுத்துள்ளான். பிஸ்கட்டை சாப்பிட்ட பல மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, […]
திமுகவின் ஆட்சிக்காக ஏங்கும் மக்கள்: திமுக
ஸ்டாலின் பேசியது பின்வருமாறு, திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி. ஆனால், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரை விட அதிகமாக கொள்ளையடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மட்டுமின்றி துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், குட்கா புகழ் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் ஊழல் செய்து வருகின்றனர். […]
பெண் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: கேரள அரசு அதிரடி உத்தரவு!
இன்று சபரிமலைக்கு சென்ற ஐதராபாத்தை சேர்ந்த செய்தியாளர் கவிதா என்பரும் அவருடன் சென்ற பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களை திருப்பி அனுப்பும்படி தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, கேரள அரசும் இரு பெண்களை சன்னதிக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்புமாரு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பெண்கள் நுழைந்தால் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தை மூட பந்தள மன்னர் குடும்பம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கேரள அரசு முக்கிய […]





