கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் பொறியாளராக பணிபுரிபவர் ஜேம்ஸ் டோமோர். இவர் கடந்த வாரம் அந்நிறுவனத்தில் நடக்கும் பாலின பாகுபாடு குறித்து அறிக்கை ஒன்றை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில், நிறுவனத்தில் ஆண்-பெண் பாகுபாடு அதிகம் பார்க்கப்படுகிறது என்றும், பெண்களுக்கு தொழில்நுட்பத்துறை மற்றும் தலைமை பொறுப்பு போன்ற பதவிகளை கொடுக்க மறுக்கின்றனர் என எழுதியிருந்தார். ஜேம்ஸ் டோமோரின் இந்த அறிக்கை உலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி […]
உலக செய்திகள்
இலக்கை குறிவைத்து விட்டோம் – வட கொரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயார்
சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கண்டம்விட்டு கண்டம் பாயும் இரு ஏவுகணைகளை இந்நாடு பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் வட கொரியாவின்மீது ஐ.நா.சபை சமீபத்தில் புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. இது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. […]
டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடம் இல்லை: சீன ராணுவ நிபுணர்கள் திட்டவட்டம்
டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடமில்லை எனவும், அங்கிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் சீன ராணுவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். டோக்லாம் விவகாரத்தில் சமரசத்துக்கே இடமில்லை எனவும், அங்கிருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் சீன ராணுவ நிபுணர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். சிக்கிம் எல்லை அருகே உள்ள டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்ததை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் […]
வடகொரியாவின் ஏவுகணையை இடைமறிக்க முடியும் : ஜப்பான் அறிவிப்பு
அமெரிக்க தீவை நோக்கி செலுத்தும் வடகொரியாவின் ஏவுகணைகளை சட்டப்படி இடைமறிக்க முடியும் என்று ஜப்பான் நாட்டின் ராணுவ மந்திரி ஒனோடெரா கூறினார். அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது 4 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா விடுத்துள்ள மிரட்டல், உலக அரங்கை அதிர வைத்துள்ளது. அடுத்த சில தினங்களில் இதற்கான திட்டத்தை வடகொரியா இறுதி செய்யப்போவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. வடகொரியாவின் ‘வாசோங்-12’ ஏவுகணைகள், ஜப்பானின் மீது […]
அமெரிக்கா மீது தாக்குதல்: வடகொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவின் குயாம் தீவு மீது ஏவுகனை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது நியுஜெர்சியில் உள்ள பெட்மினிஸ்டர் என்ற இடத்தில் தனது விடுமுறையை குடும்பத்துடன் கழித்து வருகிறார். இந்த நிலையில் வடகொரியா மிரட்டல் குறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வடகொரியாவின் மிரட்டலை எப்படி கையால்வது குறித்து அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. […]
ஆண்களைவிட பெண்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்படும்: புதிய ஆய்வில் தகவல்
ஆண்களின் மூளையை காட்டிலும் பெண்களின் மூளை மிக தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது. மறதி நோயான ‘அல்சமீர்’ நோய் தொடர்பாக அமெரிக்காவில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 43,034 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுறுசுறுப்பு, ஒரு விஷயத்தை உற்று நோக்குதல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகள் பற்றி ஆராயப்பட்டது. அதில் […]
தாய் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சொந்த தம்பியை சுட்டுக்கொன்ற 10 வயது சிறுவன்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மேற்கு மிப்ளின் நகரில் வசிக்கும் பெண்மணி தனது பாதுகாப்புக்காக உரிய அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருந்திருக்கிறார். நேற்று காலை அந்த பெண்ணின் இரு மகன்களும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, 10 வயதான மூத்த மகன் தாய் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது 6 வயது தம்பியின் தலையில் சுட்டுள்ளான். இதனையடுத்து, தனது தாய்க்கு போன் செய்து தம்பியை சுட்ட விவகாரத்தை கூறியுள்ளான். ரத்த வெள்ளத்தில் […]
நைஜீரியா: 30 மீனவர்களை கொன்று போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம்
நைஜீரீயா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் 30-க்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கிருஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்கு வசிக்கும் மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று […]
ராணுவ பயிற்சி எதிரொலி: அமெரிக்க தீவு மீது ஏவுகணை வீச வடகொரியா திட்டம்
அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீசி தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜூலையில் 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் ஐ.நா. சபை பொருளாதார தடை […]
செப்டம்பரில் உலகம் அழிந்து விடும் : பிரபல ஆராய்ச்சியாளர் பரபரப்புத் தகவல்
அமெரிக்காவை சேர்ந்த டேவிட் மேடி (David Meade) என்ற விஞ்ஞான ஆராய்ச்சியாளர் பூமியில் மனித இனம் சந்திக்கும் கடைசி மாதம் ஓகஸ்ட் எனவும் செப்டம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிடும் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். பூமியில் இடம்பெறும் நிகழ்வுகளை வைத்து எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் சம்பவங்களை கணிப்பதில் வல்லவரான இவர் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் ஒகஸ்ட் மாதம்தான் மனிதர்களின் கடைசி மாதம் எனவும், செப்டம்பர் மாதம் உலகம் அழிந்து விடும் எனவும் கணித்துள்ளார். […]





