உலக செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் உள்ள பிலிரான் தீவுப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலச்சரிவில் சிக்கி 26 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால் அவர்களை பணி நடைபெற்றுவருகிறது. மேலும் பலத்த மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து […]

டிரம்பின் முடிவால் பாதிப்புக்கு உள்ளாகப்போகும் இந்தியர்கள்

அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை செய்யும் சலுகை ரத்தாகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளை அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கு ‘எச்-1 பி’ விசா கட்டாயமாகும். இந்த விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது. ஒபாமா அதிபராக இருந்த காலத்தில்,‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு எச்-4 விசா […]

ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடியில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

தெற்கு ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடியை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் படைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் சோதனை இரு சோதனை சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர், இந்த தாக்குதலில் 11 போலீசார் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திவிட்டு தலிபான் பயங்கரவாதிகள் தப்பிவிட்டனர் என கூறப்படுகிறது. இருப்பினும் போலீஸ் […]

நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி – 15 பேர் மாயம்

சிலி நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் இறந்தனர். மேலும், நிலச்சரிவால் மாயமான 15 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். சிலி நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அங்குள்ள வீடுகள், மற்றும் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பலத்த மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 11.4 செ.மீ மழை பெய்துள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிலியின் முக்கிய சுற்றுலா […]

அமெரிக்கா செல்ல விரும்பும் பயணிகளுக்கு டொனால்டு டிரம்ப் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கருதி, அந்நாட்டுக்கு வருபவர்களுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிறைய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். தற்போது மீண்டும் புதிய விதிமுறைகளை வெளியிட்டார். அதன்படி, விசா இல்லாமல் நுழையும் சலுகையை பெற விரும்பும் 38 நாடுகளை சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்குள் நுழைய பயண அனுமதி பெற வேண்டும். தங்கள் நாடுகளை கடந்து அமெரிக்காவுக்கு செல்லும் பயணிகளை அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அளித்த தகவல்கள் அடிப்படையில் […]

சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வா? காங்கிரஸ் மறுப்பு

சோனியா காந்தி சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் அவரால் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. மூத்த நிர்வாகிகளை வீட்டுக்கு அழைத்து கட்சி தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக 11–ந் தேதி ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று (சனிக்கிழமை) முறைப்படி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கிறார். […]

இந்திய- பாகிஸ்தான் போர் வெற்றி தினம்

1971-ம் ஆண்டு நடந்த இந்திய- பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் ராணுவம் தானாக முன்வந்து இந்தியாவிடம் சரணடைந்தது. இதையடுத்து கிழக்குப் பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதி ‘வங்காளதேசம்’ என்ற தனி நாடாக உருவானது. இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளன்று, இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி இந்தியவாயிலில் (இந்தியா கேட்) உள்ள அமர் ஜவான் […]

இந்தோனேஷியா ஜாவா தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. […]

பாடசாலைப் பேருந்தும் தொடருந்தும் விபத்து – 4 மாணவர்கள் பலி!!

Perpignan (Pyrénées-Orientales) நகரிற்கு ஆருகிலுள்ள Millas இல் TER தொடருந்தும் பாடசாலைப் பேருந்தும் விபத்திற்கு உள்ளாகி உள்ளன. இதில் நால்வர் கொல்லப்பட 24 பேர படுகாயமடைந்துள்ளனர் lieu-dit Los Palaus வீதி மட்டத் தொடருந்துக் கடவையில் இன்று மாலை 16 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது இந்த விபத்தில் கொல்லப்பட்ட நால்வரும் பாடசாலைப் பிள்ளைகள் ஆவார்கள். காயமடைந்த 24 பேரில் பலர் உயிராபத்தான நிலையில் உள்ளனர். உடனடியான ஒரு பெரும் […]

இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை சுவரில் ஏற முயன்றவர் கைது

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ அரண்மனை, பக்கிங்ஹாம் அரண்மனை ஆகும். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை உச்சக்கட்ட பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும். இந்த நிலையில், சுமார் 24 வயதுள்ள ஒரு வாலிபர், நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையின்யின் சுவற்றின் மீது ஏற முயற்சித்தார். சில நிமிடங்களில் இதை கவனித்த போலீசார், உடனடியாக அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. அவர் மத்திய லண்டன் […]