உலக செய்திகள்

விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை படைத்த் ரஷ்ய வீரர்கள்

விண்வெளியில் ரஷியாவை 2 வீரர்கள் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர். இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து 150 பில்லியன் டாலர் (ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது. 6 மாதத்துக்கு ஒரு முறை 3 […]

வடகொரியாவில் நடப்பது என்ன?

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது. இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியா தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறியுள்ளதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஐநா கூறியதாவது, வடகொரியா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை […]

லிபியாவில் படகு கவிழ்ந்து 90 பேர் உயிரிழப்பு!!

லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை லிபியா கடற்பகுதியில் 10 பேரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 8 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என என்றும் இடம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.

13 வயது தங்கையை கற்பழித்துக் கொன்ற அண்ணன் கைது

பாகிஸ்தானில் 13 வயது தங்கையை, அவரது அண்ணனே கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கால கட்டத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படாமல் இருப்பதால், அவர்களின் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இது போன்ற கொடிய மிருகங்கள் பெண்களை கற்பழிப்பதோடு இல்லாமல் அவர்களை கொடூரமாக கொலையும் செய்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்மாயில் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி […]

11 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்…

சீனாவில் 11 வயது பள்ளி சிறுமி 5 மாத கற்பமாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரது தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறியுள்ளனர். ஆனால், போலீஸாருக்கு இது குறித்து மருத்துவமனை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் போலீஸார் […]

இரண்டு உலக சாதனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திப்பு

துருக்கியைச் சேர்ந்த உலகின் உயரமான இளைஞரும், இந்தியாவை சேர்ந்த உலகின் குள்ளமான பெண்ணும் எகிப்து நாட்டில் சந்தித்தனர். உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தவர், இந்தியாவின் நாக்பூர் நகரை சேர்ந்த ஜோதி ஆம்கே(25). இவரது உயரம் 2 அடி 6 அங்குலம் (62.8 செ.மீ.). அதேபோல் உலகின் உயரமானவர் என்ற உலக சாதனையை படைத்தவர், துருக்கியை சேர்ந்த சுல்தான் கோசென்(36). இவரது உயரம் 8 அடி […]

பிப்.8 வடகொரியா ராணுவ அணிவகுப்பு

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது ஆனால், இதற்கு மாறாக தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளுமே ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று தெரிகிறது. மேலும், இரு நாடுகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றிணைய இருப்பதாக செய்திகள் […]

வாங்க பழகலாம்….

50 வருடங்களுக்கு முன் கொரிய தீபகற்பத்தில் நடந்த சண்டைதான் வட கொரியா மற்றும் தென் கொரியாவை பிரித்து வைத்துள்ளது. தற்போது அந்த இடைவெளி அமெரிக்காவால் மேலும் அதிகரித்தது. தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரண்டு நாடுகளும் ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் இருக்கும் அமைதி கிராமம் என்ற இடத்தில் இரண்டு கொரியா நாட்டு முக்கிய அதிகாரிகளும் […]

லிபியாவில் இரட்டை கார் வெடி குண்டு தாக்குதல்

லிபியாவில் இரட்டை கார் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர். வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கார் மூலம் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அங்குள்ள பெங்காஸி என்ற நகரம் அருகே உள்ள மசூதி முன்பு நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தில் வைத்து வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அரை மணி நேரம் கழித்து மீண்டும் அதே இடத்தில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அடுத்தடுத்த இந்த […]

அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தெற்கு அலாஸ்கா கடற்பகுதியில் 8.2 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கொடியாகில் இருந்து தென்கிழக்காக 300 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சக்திவாய்ந்த […]