சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் டிடிவி தினகரன், தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டவுடனே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் மேலும் எதிரிகளுக்கு பிரஷரை வரவழைக்கவே பிரஷர் குக்கர் சின்னம் பெற்றதாக கூறினார். அவர் கையில் குக்கரை வைத்துக்கொண்டே பிரச்சாரம் செய்வத் அத்தொகுதி மக்களை கவர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]
தமிழ்நாடு செய்திகள்
ஆர்.கே.நகரில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்!!
ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த முறை பணப்பட்டுவாடா அதிக அளவில் நடைபெற்ற காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த முறையும் அதேபோன்று நடந்துவிட கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையம் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இன்று வாகன சோதனை நடத்தியபோது, ஒரு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பறிமுதல் […]
மீனவர்களை மீட்கக்கோரி சென்னையில் போஸ்டர் ஓட்டிய 2 பேர் கைது
ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் போஸ்டர் ஓட்டிய புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் இன்னும் கரை திரும்பாத நிலையில் மீனவர்களை மீட்டுத்தரக்கோரி அவர்களது உறவினர்கள் மூன்று நாட்களாக தொடர்ந்து குழித்துறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஆங்காங்கே பரவலாக மீனவர்களை மீடகக் கோரி, மீட்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து […]
தேர்தல் அதிகாரிக்கு உதவியாக ஓபிஎஸ் உறவினர்
ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் வேலுச்சாமிக்கு உறுதுணையாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக வேலூச்சாமிக்கு உதவியாக ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் பூபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் வேலுச்சாமியின் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். விஷால் தொடர்பாக வெளியான பல புகைப்படங்களில் அவரை பார்க்க முடிகிறது. வேட்பு மனு பரீசிலனைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் உதவி பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் […]
ஆர் கே நகர் தேர்தலுக்காக இன்று 3 மணிக்குள் விஷால் மேற்கொள்ளும் யுத்தம் !
நடிகர் விஷால் ஆர் கே நகர் தேர்தலில் சுயாட்சியாக கடந்த வாரம் களம் இறங்கினர். இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவருக்கு அதிர்ச்சியாக கையெழுத்து போலி என மனுவை நிரகரித்தது தேர்தல் ஆணையம். இப்பிரச்சனை கடந்த இரண்டுநாட்களாக பரவலாக பேசப்பட்டு வருகிறது .விஷால் தன பக்கம் இருக்கும் நியாயத்தையும் , ஆதாரத்தையும் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் நேற்று தேர்தல் அணையும் ராஜேஷ் லகானி யிடம் நடந்ததை சொல்லி மேல்முறையீடு […]
சிங்கப்பூர் மருத்துவமனையில் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. உடல் நலக்குறைப்பாடு காரணமாக, கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கியிருக்கிறார். நடக்கவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட தொலைக்காட்சி பேட்டிகளின் போது கூட கோர்வையாக பேச முடியாமல் அவர் திணறுகிறார். அந்நிலையில், கடந்த 28ம் தேதி விமானம் மூலம், சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றார். வழக்கமாக வேட்டி, சட்டையில் செல்லும் விஜயகாந்த் […]
தமிழகத்திற்கு கனமழை இல்லை
அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னத்தால் இன்னும் 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் ஓகி புயலால் கன்னியாகுமாரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. அந்நிலையில், மேலும் ஒரு புயல் உருவாகும் எனவும், அதனால், தமிழகம் குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என செய்திகள் […]
மகனுடன் சேர்ந்து கணவரை அடித்துக் கொன்ற பெண்…!
பணப் பிரச்னையால் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர் தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், விவசாயி செல்வராஜ் அரசின் தொகுப்பு வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்டி உள்ளார். இதற்கு மானியமாக 55 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் […]
இசையமைப்பாளர் ஆதித்யன் திடீர் மரணம்…
பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஆதித்யன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். நடிகர் கார்த்திக் நடித்த அமரன் தொடங்கி, சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி வரை 25 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் ஆதித்யன். இவர் இசையமைத்ததில் அமரன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றன. அதன்பின் சினிமாவிலிருந்து ஒதுங்கி தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் மீடியாக்களிலிருந்து ஒதுங்கி இருந்த அவர் உடல் நலக்குறைபாடு […]
வேறொரு சுயேட்சைக்கு ஆதரவு தருவேன்
ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்ட நிலையில் அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அரசியல் தலைவர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் இன்று கமல்ஹாசனை சந்திக்கும் விஷால், அதனையடுத்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்கவுள்ளார். மேலும் அவர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒருவேளை ஆர்.கே.நகரில் […]





