நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிய நிலையில் இன்று அவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் கேப்டன் விஜயகாந்த், 1978 ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். மதுரையில் இருந்து சினிமா ஆசையோடு வந்த விஜயகாந்த் இயக்குநர் எம்.ஏ கஜாவின் இனிக்கும் இளமை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் இவரது படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பின்னர் […]
தமிழ்நாடு செய்திகள்
தீக்குளித்த வைகோவின் உறவினர் மரணம்
சமீபத்தில் தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் அவருக்கும், சீமான் தரப்புக்கும் ஒரு மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் வைகோ தரக்குறைவாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை பதிவு செய்து வந்தனர். காவிரி விவகாரம் மற்றும் வைகோவை பற்றிய அவதூறு மீம்ஸ்களை கண்ட வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் மனமுடைந்து தீக்குளித்தார். அதன்பின், சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]
நிலைமை சரியில்லை
தமிழ்நாட்டில் தற்போது தனக்கு சாதகமில்லாத சூழ்நிலை நிலவுதால், அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் தள்ளிப்போட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்த ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் பெரும் அமைதி காத்தார். அதனால், அவர் எதற்கும் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என ரஜினி பதில் கூறி […]
ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளியாக சித்தரித்துவிட்டனர்
நாங்கள் கலவரத்தில் ஈடுபடவில்லை எனவும், ஊடகங்கள் தான் எங்களை குற்றவாளி போல் சித்தரித்து விட்டது எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் போராடி வருகின்றனர். தமிழ் சினிமா துறையினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற […]
எச்.ராஜாவுக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது
எச்.ராஜா பரிதாப நிலையில் இருப்பதால் அவருக்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கடந்த 10ஆம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், திரு.முருகன் காந்தி, அமீர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதற்கு எச்.ராஜா போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து, சீமான், […]
திருவிடந்தை சர்வதேச ராணுவ தளவாடக் கண்காட்சியைக் காணக் குவியும் பொதுமக்கள்
தமிழ்ப்புத்தாண்டு விடுமுறையை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தை சர்வதே ராணுவ தளவாடக் கண்காட்சியைக் காண அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர். கடந்த 11- ஆம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆதார் கார்டு பான்கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை காட்டியபிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் […]
எல்லாவற்றிற்கும் போராட வேண்டியுள்ளது
தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த் எல்லாவற்றிற்கும் போராட வேண்டியுள்ளதால், வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது என தெரிவித்துள்ளார். தமிழர்களின் புத்தாண்டான சித்திரை திருநாளையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். சீருடையில் உள்ள காவலரை தாக்குவது வன்முறையின் உச்சம் என சில நாட்கள் முன்பாக திடீரென சீறினார் ரஜினிகாந்த். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சீருடையில் இருந்த காவலர்கள் 8 […]
காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்வது மிகப்பெரிய மோசடி – H. ராஜா சாடல்
காவிரி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பயணம் மேற்கொள்வது மிகப்பெரிய மோசடி என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ஹெச்.ராஜா, ஸ்டாலினின் குடும்பமே தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காவிரிக்காக தீக்குளித்த வைகோவின் உறவினர்
ம. தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபயணத்தைத் தொடங்கியபோது, அவருடன் நடைப்ப்பயணம் சென்று கொண்டிருந்த மதிமுக தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளித்து பலியானார். இந்த அதிர்ச்சி செய்தியே இன்னும் மதிமுகவினர் மனதில் வருத்தத்தை வரவழைத்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மேலும் ஒரு மதிமுக தொண்டர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளித்துள்ளார். வைகோவின் நெருங்கிய உறவினரான இவர் தற்போது உயிருக்கு ஊசலாடுவதாக […]
மன்னித்து விடு ஆஷிபா – கமல்ஹாசன் உருக்கம்
காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிபா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. […]





