முக்கிய செய்திகள்

Head News

ரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு! அப்படி என்ன பேசினார்?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒருவருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் தற்போது வரை அரசியல் கட்சி துவங்கும் பணிகளை மட்டுமே செய்து வருகிறார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார் சேலம் பகுதி ரஜினி ரசிகர் பழனி. அந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் தற்போது பழனியை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டியுள்ளனர். ரத்தம் சொட்ட சொட்ட அவர் பேசும் வீடியோ வெளியாகி […]

சென்னையில் திடீரென அதிகாலை இடம்பெற்ற நிலநடுக்கம்…

வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.வங்கக் கடலில் இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு […]

கூட்டமைப்பின் புதிய தலைவர் சுமந்திரன் ?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரனை தெரிவு செய்வது தொடர்பாக உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், கூட்டமைப்பின் தலைமையில் […]

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் அரசு வேலை!

பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு, ஓய்வுப் பெற்ற பாடசாலை ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். மாத்தளை- நாவுலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவையில் யோசனையொன்றை சமர்ப்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வெள்ளை வான் கடத்தலை அறிமுகப்படுத்தியவர் யார்? கோட்டா

இலங்கையில் வெள்ளை வான் கலாசாரத்தை அமெரிக்காவே அறிமுகப்படுத்தியது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாம் பதவியிலிருந்த காலத்தில் புலனாய்வுப் பரிவினர் பயன்படுத்திய வாகனங்கள் வெள்ளை நிறத்தில் காணப்பட்டதால், அவற்றை வெள்ளை வான் என கூறமுடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளைவான் கலாசாரத்தை கோட்டாவே அறிமுகப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆங்கில வார இதழொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 12.02.2019

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் பிறரின்  குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள் சகோதர வகையில் பிரச்னைகள் வரக்கூடும் அசைவ,  கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. […]

பேட்ட, விஸ்வாசம் 4 வார முடிவில் சென்னையில் யார் கிங்

பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பேட்டயை விட தமிழகத்தில் விஸ்வாசம் வசூலே அதிகம் என விநியோகஸ்தர்களே கூறி விட்டனர். ஆனால், அதே நேரத்தில் சென்னையை பொறுத்தவரை பேட்ட வசூலே அதிகம், ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக சென்னையிலும் விஸ்வாசம் வசூல் அதிகரித்துள்ளது. தற்போது 4 வார முடிவில் பேட்ட ரூ […]

நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்த கோட்டபய ராஜபக்சே! நீதிபதிஅதிரடி உத்தரவு

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவக நிர்மாணிப்பு குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சார்பில் மேற்கொண்ட கோரிக்கையை நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்நிலையில் வழக்கின் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் அந்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குழப்பங்களிற்கு முழுக்காரணம் சம்பந்தனே

பொருளாதர மத்திய நிலைய குழப்பங்களிற்கு முழுக்காரணம் சம்பந்தன் ஐயாவே என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்..வவுனியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற்படி தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், பி.எஸ்.எம். சாள்ஸ் வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்தபோது நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுகூட்டத்தில் ஓமந்தை பகுதியிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதாக முடிவெடுக்கபட்டது. பின்னர் சில அரசியல் வாதிகளால் தாண்டிகுளத்தில் அதனை அமைக்க வேண்டும் […]

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடமைக்கும் பணிகள் ஆரம்பம்

குறைந்த வருமானமுடைய தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்கள் இரண்டிற்கு வீடமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இதன்படி வவுனியா பம்பைமடு பிரதேசத்தினை சேர்ந்த தியாகராசா மூர்த்தி என்பவரின் குடும்பத்திற்கும் வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பமொன்றுக்குமே இவ்வாறு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளன. வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் வழிக்காட்டலில், புலம்பெயர்ந்தவர்களின் நிதிப்பங்களிப்போடு குறித்த வீடமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.