பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திடீர் பயணமாக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன நோக்கத்திற்காக சிங்கப்பூர் செல்கிறார் என்பது பகிரங்கமாக கூறப்படாதபோதும் ரணிலின் இந்த விஜயம் தற்போதைய நிலையில் அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. குறிப்பாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ரத்துச் செய்யும்வரை அமைச்சரவைக் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக இன்று இடம்பெறவிருந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை […]
முக்கிய செய்திகள்
Head News
நாட்டில் தொடரும் பயங்கரவாத அச்சுறுத்தல்
இலங்கையில் பாதுகாப்பு நிலைமை சுமுக நிலைக்கு வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தெரிவு குழுவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் அது சட்டரீதியான தெரிவு குழுவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த குழு நிகழ்ச்சி நிரலுக்கமைய தெரிவு செயற்படுவதாகவும், ஒரு நபரின் தேவைக்கு ஏற்ப அதனை மாற்ற முடியாதென […]
இன்றைய ராசிபலன் 11.06.2019
மேஷம்: இன்று முயற்சிகள் பயன்தராமல் போகலாம். சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும். பணவரத்து தாமதமாகும். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9 ரிஷபம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 […]
இன்றைய ராசிபலன் 10.06.2019
மேஷம்: இன்று பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். பெற்றோர்கள் – உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9 ரிஷபம்: இன்று புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. அதிர்ஷ்ட […]
விடுதலைப்புலிகள் இலங்கையில் வேண்டும் ஞானசாரதேரர் அதிரடி
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்ளவில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இன்று எங்களை இனவாதிகள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நாம் அப்படியானவர்கள் அல்லர். இந்த […]
புலிகளின் காலத்தில் பாவனையில் இருந்த வெடிபொருட்கள் கிணற்றில் இருந்து மீட்பு!
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் கிணறு ஒன்றிற்குள் இருந்து நேற்றையதினம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றில் இருந்து இரண்டு கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி எறிகணைகள், தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அவற்றை செயலிழக்க செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை விடுதலைப்புலிகளின் காலத்தில் பாவனையில் இருந்த வெடிபொருட்களே அவை எனவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அகதி ஒருவர் தமிழகத்தில் எரித்துக்கொலை!
தமிழகத்தின் நாகர்கோவில் உள்ள கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் இலங்கை அகதி ஒருவரை எரித்து கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அகதி ஒருவர் உட்பட மேலும் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நாகர்கோவில் கனகமாணிக்கபுரம் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட நிலையில் ஆன் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதன்போது திருநெல்வேலி சமூங்கபுரங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 34 வயதுடைய […]
இலங்கைக்குள் நுளைந்த 20 அவுஸ்திரேலிய புலனாய்வு அதிகாரிகள்
ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பியிருப்பதாக, அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்தார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர், செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இந்த தகவலை வெளியிட்டார். ”தீவிரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா புலனாய்வுக் குழுக்களுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியா 20இற்கும் அதிகமான புலனாய்வு அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்றை இங்கு அனுப்பியுள்ளது. அவர்கள் […]
விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாக சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாக அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். குறித்த அச்சுறுத்தல்கள் யாவும் கடந்த வருடம் மட்டக்களப்பில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குரிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே கடந்த சில காலங்களாக அரசாங்கத்துக்கும் புத்திஜீவிகளுக்கும் இடையிலான பிளவுகள் […]
இன்றைய ராசிபலன் 07.06.2019
மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி […]





