முக்கிய செய்திகள்

Head News

ஐ.நா. ஆணையாளருக்கு எதிராக முறைப்பாடு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி மொனிகா பின்டோ ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா. மனித உரிமை பேரவையின் தலைவர் Joaquin Alexander Maza Martelli இடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் படையதிகாரி சரத் வீரசேகர இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். குறித்த இருவரது அறிக்கைகளும் உண்மைக்கு புறம்பானவை எனவும், […]

காத்திருப்புடன் மற்றுமோர் அகதிகள் தினம்!

உரிமைக்காக போராடி, அனைத்தையும் இழந்து உயிரை மாத்திரம் தக்கவைத்துக்கொண்டும், இயற்கையின் கோரத் தாண்டவத்தாலும் அகதிகளாக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீராமல் இந்த அகதிகள் தினத்திலும் வழமைபோன்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் எமது மக்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிரகடனத்தின் அடிப்படையில் சர்வதேச அகதிகள் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இயற்கை அனர்த்தம் மற்றும் போர் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் சர்வதேச அளவில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக […]

ரவிராஜ் கொலை வழக்கு: மேன்முறையீட்டை விசாரிக்க தீர்மானம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டை எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேல்நீதிமன்ற தீர்மானித்துள்ளது. தனது கணவரின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, சசிகலா ரவிராஜினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், மேல் நீதிமன்றத்தின் ஜூரிகள் சபை […]

வடக்கு முதலமைச்சரை பதவி நீக்கப்படமாட்டார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சரை பதவி நீக்கப்படமாட்டார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வடக்கு அமைச்சர்கள் விவகாரம் மீள் பரிசீலனை

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவரை தொடர்ந்து பணியில் அமர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக, தான் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ். ஆயருடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையில் வெடித்துள்ள பிரச்சினையை சமரசமாக தீர்க்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள சமய தலைவர்கள், இன்று (திங்கட்கிழமை) காலை வடக்கு […]

புகையிரத ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். பணிக்கு இணைத்தல், பதவி உயர்வு மற்றும் ஊதிய கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அரசு உரிய தீர்வு வழங்காமையை கண்டித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். இவர்களின் கோரிக்கை குறித்து அண்மையில் பேச்சுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டாலும் அரசு உறுதிமொழி எதனையும் வழங்கியிராத சூழலிலேயே நாளை போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில்

வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வவுனியாவில் சற்று பற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது

முதலமைச்சர் மற்றும் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் : வவுனியாவில் பதற்றம்

வடக்கு மாகாண சபை முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு: சம்பந்தன்

வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை அல்ல எனவும் இதற்கு தீர்வு காண்பது என்பது சிறிய விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அத்தோடு, […]

மஹிந்த பாகிஸ்தான் விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு நாளை விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் 2017 தேசிய பாதுகாப்பு மற்றும் யுத்தம் தொடர்பிலான மாநாட்டில் இவர் உரையாற்றவுள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கான பல்கலைக்கழகத்தின் தலைவரான லெப்டினன் ஜெனரல் ரிஸ்வான் அக்தாரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.