Today rasi palan | இன்றைய ராசிபலன் 04.09.2019 மேஷம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் […]
முக்கிய செய்திகள்
Head News
கவின் முகம் தர்சன் கண்டுபிடித்தார்
கவின் முகம் தர்சன் கண்டுபிடித்தார் https://www.youtube.com/watch?v=yMJQE36Ee1E
ஆசிரியர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு, கலாசார ரீதியிலான சிறுவர்களையன்றி, தொழில்நுட்ப ரீதியிலான பிள்ளைகளை தற்போது சந்திக்க நேரிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 557 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.
கோத்தாபயவின் அறிவிப்பு
பயங்கரவாதமும், அடிப்படைவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கு எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று (02) நடைபெற்ற முற்போக்கு தொழிற்சங்கங்களின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், முற்போக்கு தொழிற்சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அடிப்படைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தலைதூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டின் பாதுகாப்பு […]
இலங்கையில் குவிக்கப்படும் செல்வம்! சஜித்
நாட்டின் செல்வத்தை உருவாக்குவதற்கான சிறந்த வழிமுறையாக முதலாளித்துவ பொருளாதார முறை கருத்தப்பட்டாலும் வளங்களை பகிர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் ஏழை மக்கள் பொருளாதார செயற்பாடுகளிலிருந்து தூரப்படுத்தப்படுகிறார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். முதலாளித்துவ பொருளாதாரத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் பொருளாதார முறையின் ஊடாக திரட்டப்பட்ட செல்வத்தை சோசலிஸ முறையின் ஊடாக பிரஜைகளுக்கு வழங்கக் கூடிய கலப்பு பொருளாதார முறைமை ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். மாத்தறை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்ட ஹஸ்திராஜகம மாதிரி கிராமத்தை […]
தமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்த்..? பரபரப்பு தகவல்..!
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் யாரும் எதிர்பாராத விதமாக தெலுங்கானா ஆளுநராக நேற்றையதினம் நியமிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக தமிழிசை வகித்து வந்த தமிழக பாஜக தலைவர் பதவி தமிழகத்தில் காலியாக உள்ளது. இந் நிலையில் பா.ஜ.கவின் தமிழக அடுத்த தலைவராக எச் ராஜா வா? அல்லது பொன் ராதா ? வருவார்கள் எனப்பேசப்படுகின்ற நிலையில் , அடுத்த தமிழக பாஜக தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு கொண்டிருப்பது […]
சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி!
சபைத் தலைவர் பதவியிலிருந்து ரணிலை நீக்க அனுமதி! சபைத் தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபைத் தலைவர் பதவியிலிருந்தே பிரதமரை நீக்க தீர்மானிக்கப்பட்டுளது. குறித்த விகாரையின் பெரும்பான்மையினர் இதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று பிற்பகல் களனி ரஜா மகா விகாரையின் பங்களிப்பாளர் சபை கூட்டத்திலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விகாராதிபதி சங்கைக்குரிய பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மஹிந்த […]
நாட்டின் இறைமையை தாரைவார்க்க மாட்டோம் – கோட்டாபய ராஜபக்ஸ
உலக ஒழுங்கின் அடிப்படையில் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளில் ஈடுபடுவது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு இன்றியமையாத ஒன்று என்றும் எனினும் , எந்தவொரு நாட்டுக்கும் அடிமைப்பட்டும், நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் ஒருபோதும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மாட்டோம் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தேசிய மாநாடு இன்று பத்தரமுல்லை, புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் , பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 02.09.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 02.09.2019 மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். […]
மனோ ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டாராம்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனினும் அவர் யார் என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்புத்தலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு விடுக்கப்படவில்லை. ஏனைய கட்சிகள் தமது வேட்பாளர்களை உடனடியாக அறிவித்திருந்தாலும் தற்போது அவர்களுக்குள் […]





