ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கையானது தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிகபட்டுள்ளது. அந்தவகையில் கட்டுப் பணம் செலுத்தப்பட்ட 41 வேட்பாளர்களில் 35 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதேவேளை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு 11.10 முதல் 11.45 வரையான காலப் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை இரண்டு எதிர்ப்புகள் மட்டுமே […]
முக்கிய செய்திகள்
Head News
தேர்தல் செயலகத்தில் மஹிந்த
தேர்தல் செயலகத்தில் மஹிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் பொதுஜக பெரமுனவின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜக பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள நிலையில் மஹிந்த வருகை தந்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. […]
சிவாஜிலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல்
சிவாஜிலிங்கத்திற்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் தொலைபேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கொழும்பில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொலை அச்சுறுத்தல் காரணமாக தான் தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும் தாம் இருக்கும் இடத்தை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் […]
Today rasi palan | இன்றைய ராசிபலன் 07.10.2019
Today rasi palan | இன்றைய ராசிபலன் 07.10.2019 மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.பிரபலங்கள் உதவுவார்கள். யாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடிவரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். […]
இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்
இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து ஏற்பாடு செயதுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்து சுகததாச மைதானத்திற்கு அழைத்து மக்களைப் […]
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரணிலிற்கு சிறை உறுதி
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரணிலிற்கு சிறை உறுதி நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் சிறைசெல்ல நேரிடும் என்பதை அறிந்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக் ஷவிற்கு எதிராக பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எனினும் தாம் அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு மாற்று வழிகளை பிரயோகித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் […]
சஜித்தின் முதல் அதிரடி அறிவிப்பு !
சஜித்தின் முதல் அதிரடி அறிவிப்பு ! எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது ஆட்சியின் கீழ் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை புதிய பொருளாதார திட்டத்தின் கீழ் பராமரித்துச் செல்ல நடவடிக்கை எடுப்பபேன். அரச நிறுவனங்கள் ஒருபோதும் நட்டமடைய கூடாது என்பதற்காக விசேட திட்டங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். […]
பிக் பாஸ் வெற்றியாளர் இவர்தான்! தர்ஷன்
பிக் பாஸ் வெற்றியாளர் இவர்தான்! தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பினாலே நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் சாண்டி, முகென், ஷெரின், லாஸ்லியா ஆகிய 4 பேரும் ஃபைனலிஸ்ட்களாக தேர்வாகியுள்ளனர். பினாலே நிகழ்ச்சியில்தான் யார் டைட்டில் வின்னர் என தெரியவரும். இந்நிலையில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட தர்ஷனை வெற்றியாளர் என்று கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தர்ஷன் வெளியேறிய பின்னர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் […]
இன்று யாழில் வீடு புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம்
இன்று யாழில் வீடு புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் தென்மராட்சி மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை நுழைந்த நான்கு பேரடங்கிய குழு வீட்டின் கேற் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியதையடுத்து குறித்த ஆயுதக் கும்பல் தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் […]
இன்று மைத்திரியின்யின் இறுதி முடிவு
இன்று மைத்திரியின்யின் இறுதி முடிவு அனைத்து ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளர்களை இன்று கொழும்பிற்கு வரவழைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று நண்பகல் 12.00மணிக்கு ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறவுள்ள விசேட கூட்டத்திற்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க.வின் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவ்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கா அல்லது ஐக்கிய தேசிய முன்னணியிற்காக தமது ஆதரவை […]





