2019 ஆம் ஆண்டிற்கான முதல் அமைச்சரவை முன்மொழிவுகள் அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பமானது. அதன் படி அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளும் இன்று ஜனாதிபதியால் ஒப்புதல் வழங்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். மேலும் அவற்றில் பெரும்பாலான திட்டங்களை நிதி அமைச்சகத்துடன் தொடர்புபடுத்தியதாக இருந்தது என்றும் […]
முக்கிய செய்திகள்
Head News
புதிய ஆண்டின் புதிய அமைச்சரவையில் மனந்திறந்த மைத்திரி!
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் நான் ஈடுபடவில்லை. இனிமேல் ஈடுபடபோவதுமில்லை. என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது புத்தாண்டு வாழ்த்துகளை முதலில் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறுகிய உரையொன்றை நிகழ்த்தியுள்ளார். அமைச்சுகளுக்கான நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் ஒதுக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் சில அமைச்சர்கள் அதிருப்தி […]
இன்றைய ராசிபலன் 01.01.2019
மேஷம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வெளி வட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும் உத்யோகத்தில் உயரதிகாரி […]
விஸ்வாசம் இருக்கட்டும்! உலகளவில் இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
கடந்த சில நாட்களுக்கு முன் தான் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியானது. இதன் சாதனையை நேற்று வெளியான விஸ்வாசம் படம் டிரைலர் முறியடித்து விட்டது. [ads1] இரு படங்களும் பொங்கலுக்கு மோதிக்கொள்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க தற்போது #1YearOfRajiniMakkalMandram , #1yearOfRMM என ரஜினி பற்றிய டேக்குகளில் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. காரணம் இதே நாளில் அவர் கடந்த 2017 ல் தன் அரசியல் முடிவை […]
கூட்டமைப்பின் திட்டத்தை தோற்கடிக்க போடப்படும் பாரிய திட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய அரசியலமைப்பு திருத்த யோசனைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோற்கடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.வடக்கு-கிழக்கு இணைப்பு போன்ற அரசியலமைப்பு திருத்தங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இருந்த போதிலும், நாடாளுமன்றத்தில் இதுவரையில் எந்த வரைவும் சமர்ப்பிக்கப்படவில்லை. அது தொடர்பான எந்த கலந்துரையாடல்களிலும் தாங்கள் பங்கேற்கவில்லை. எவ்வாறாயினும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தல்விடும் எந்த திட்டமும் நாடாளுமன்றத்தில் தடுக்கப்படும். […]
இராணுவத்துக்கு எதிராக பொங்கி எழுந்த முல்லைத்தீவில் மக்கள்
கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக அந்த பிரதேசத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் இன்று காலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவமே கேப்பாபுலவு மண்ணிலிருந்து உடனடியாக வெளியேறு என்ற பிரதான பதாகையைச் சுமந்தவாறு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக எமது களநிலைச் செய்தியாளர் கூறுகின்றார். ஆர்ப்பாடத்தில் இடுபட்டுள்ள மக்களை […]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் பெறுவதை அனுமதிக்கக் கூடாது
மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்கமுடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியிருக்கிறார். வடமத்திய மாகாணத்தில் நொச்சியாகம பகுதியில் நேற்று பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராஜபக்ச, அரசாங்கத்துக்கு அளிக்கின்ற ஆதரவு மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் அடையக்கூடும்.போரின் முரமாக அடையமுடியாததை அரசியலமைப்பின் ஊடாக அவர்கள் […]
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் எடுத்த அதிரடி முடிவு!
ஐக்கிய தேசிய கட்சியின் எட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர்.அத்துடன் 2019 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போதும் சுயாதீன அணியாக செயற்படுவதற்கு செயற்படவுள்ளதாகவும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது. கிடைக்கப்பெற்றிருக்கும் இந்த ஒரு வருடத்தில் சகல மக்களுக்கும் சமமான சலுகைகள் கிடைக்கப்பெறவேண்டும்.கடந்த மூன்றரை வருடங்களிலும் நாட்டின் சகல பகுதிகளுக்கும் முழுமையான சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அவ்வாறு மக்களின் ஆட்சிக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்காகவே சுயாதீனமாக இயங்குவதற்கான தீர்மானத்தை […]
இன்றைய ராசிபலன் 31.12.2018
மேஷம்: எதையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். […]
நள்ளிரவில் நடுரோட்டில் இறங்கி குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா, யாஷிகா!
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும். ஆனால் அவர்களை பிக்பாஸ் முடிந்த பிறகு அவ்வளவாக ஒன்றாக பார்க்க முடியவில்லை. ஆனால் தற்போது இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக தான் சென்று வருகின்றனர். சமீபத்தில் கூட ஆட்டோவில் இருந்தவாறு இருவரும் பேஸ்புக்கில் லைவ்வில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர். தற்போது இன்னொரு சம்பவமாக நள்ளிரவில் நடுரோட்டில் ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் அவர்களது தோழிகள் சிலர் சேர்ந்து மாரி-2வின் ரவுடி பேபி பாடலுக்கு […]





