மேஷம்: மதியம் 2 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால்கடந்த காலத்தில் கிடைத்தநல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்துலாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும்.நேர்மறைஎண்ணமுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வரு வார்கள். வியாபாரத்தில் லாபம் வரும்.உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 2மணி முதல் சந்திராஷ்டமம் […]
முக்கிய செய்திகள்
Head News
இலங்கையில் முக்கிய திரையரங்கில் 2018ல் அதிகம் வசூலித்த படம்- தளபதியா? சூப்பர் ஸ்டாரா?
ரஜினி-விஜய் படங்கள் தான் தமிழ் சினிமா வசூல் சாதனைகளை உயர்த்திக் கொண்டே போகின்றன. சர்கார்-2.0 படத்தின் வசூல் ஒப்பீடுகள் தான் கடந்த வருட இறுதியில் நடந்தது. அடுத்து பொங்கலுக்கு வரும் பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களுமே சர்கார் வசூலுடன் ஒப்பிட்டுப் பேச இருக்கின்றன. தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்கள், வெளிநாடு, இலங்கை என தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்படி இலங்கையில் உள்ள வசந்தி சினிமாஸ் தங்களது திரையரங்களில் […]
மைத்திரி தன்னை அழித்து விட்டதாக ஒருவர் ஒப்பாரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழித்து விட்டார் என கடுவலை நகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொது வேட்பாளராக களமிறங்கியப் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை அழைத்ததாகவும் அதற்கமைய தான் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]
கோத்தபாய உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு […]
தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் சுமந்திரன்
புதிய அரசியலமைப்பின் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே சுமந்திரன் மேற்கொண்டுவருகின்றார். இவரின் நடவடிக்கைகள் பிரபாகரன் மேற்கொண்டுவந்த பிரசாரங்களையும் விட ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு […]
மைத்திரிக்கு மனநல கோளாறு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு என பெண் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யக்கோரி இடைபுகு மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் இந்த இடைபுகு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிவில் செயற்பாட்டாளரான தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் இந்த […]
இன்றைய ராசிபலன் 03.01.2019
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள்வந்துப்போகும். குடு ம்பத்தில்உள்ளவர்களுடன் வளைந் துக் கொடுத்துப் போவது நல்லது. பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. உத்யோகத்தில் சக ஊழியர் களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங் குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் […]
பேட்ட படத்தின் இந்தி டிரைலர்! இதோ
ரணில் தலைமையில் கடுமையான தீர்மானம்
சிறிலங்கா அரசாங்கம் சார்ந்த விளம்பரங்கள் தொடர்பில் இறுக்கமான ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதற்கான யோசனையொன்றுக்கு நேற்றைய தினம் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு அரச விளம்பரங்களை வழங்குவதை குறைக்க திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் இதனை ஒரு யோசனையாக இன்று நடைபெறவுள்ள வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. […]
துப்பாக்கிச் சூடு – கொலைகளை கட்டுப்படுத்த நாமலின் அறிவுரை
நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிக் கலாசாரத்தை அடக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த மூன்றரை வருடங்களில் ஏறத்தாழ தினசரி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகள் இடம்பெற்று வருவது குறித்து தகவல்கள் செய்திகள் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில், மஹிந்த அரசில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த பாதாள உலக கும்பலும் தற்போது தலைவிரித்தாடுவதாக கூறப்படுகிறது. எனினும், பாதாள உலகத்தினரை தூண்டி விடுவது மஹிந்த அணியென ஐக்கிய […]





