சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைச் சீண்டவேண்டாமென்றும் அதனால் விளைவுகள் விபரீதமாகிவிடும் என்றும் ரணில் தரப்பை கடுமையாக எச்சரித்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே மைத்திரி மேற்கண்டவாறு கூறினார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம். இதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பல்வேறு வித்தைகளை காட்டி ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார் ரணில். நான் அதற்கு கடைசி வரை […]
இலங்கை செய்திகள்
மஹிந்த குறித்து ரணிலின் மிக முக்கிய செய்தி
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஸவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் வழங்கியுள்ள செவ்வியில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் ஒருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு […]
கொழும்பிற்குள் நுளைந்தார் சந்திரிக்கா!! அடுத்து என்ன நடக்கும்??
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்க, மாதுலுவாவே சோபித தேரர் நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதுலுவாவே சோபித தேரர் நினைவுக் கூட்டம் தற்போது புதிய நகர மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட அரசியல் முக்கியஸ்தர்கள், ராஜதந்திரிகள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். இதேவேளை கடந்த மாதம் […]
ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! ஐக்கிய தேசிய கட்சி அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் தயாராகவே இருக்கிறோம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதியின் செயற்பாட்டால் சர்வதேச ரீதியாக நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, “சர்வதேசம் இலங்கைக்கான முதலீடுகளை நிறுத்தியுள்ளது. நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள […]
தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரிடம் விலை போயுள்ளது?
ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட்டாலே போதும், அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை நாம் பெற்றுத்தருவோம். அரசியல் தீர்வு விடயத்தில் மைத்திரி -மஹிந்த கூறுவதையே சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியிடம் விலை போயுள்ளார் ஒரு சிலர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவரையும் தவறாக வழிநடத்தி […]
மிரட்டும் மைத்திரியால் பதறும் உறுப்பினர்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது. இலங்கையின் சமகால பிரதமர் யார் என்பது தொடர்பான அதிகார போட்டியால் கொழும்பு அரசியல் பெரும் பதற்ற நிலையை அடைத்துள்ளது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கு அமைய எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும் பலரை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு பிரதமர் பதவி கிடைக்கும் என்பது பலரின் […]
மைத்திரியின் செயலால் கோபப்பட்ட சம்பந்தர்
தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு அடுத்த தீபாவளிக்கிடையில் கௌரவமான தீர்வு எட்டப்படவேண்டும் எனவும் அதற்கு எங்கள் எல்லோருக்கும் இறைவன் நல்ல புத்தியை வழங்கவேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி […]
மனம் வருந்தும் ரணில்
என்னுடன் இருக்கின்ற தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நாட்டை அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளுவது முறையானதல்ல. ஜனாதிபதி தனது சட்டவிரோதமான நடவடிக்கையினால் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுடன் தன்னால் பணியாற்ற முடியாதிருந்ததாகவும் அவரின் பொருளாதாரக் கொள்கைகள் நிலைமைக்குப் பொருத்தமானதாக இருக்கவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற கூட்டத்தில தெரிவித்திருந்தமை தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் […]
சுமந்திரன் விரைவில் கைது!! ஜனாதிபதி மைத்திரி அதிரடி
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.எ சுமந்திரன் அவர்களை கைது செய்வதற்குறிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் பாதுக்காப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியின் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது… நேற்றைய தினம் வவுனியா நகரமண்டபத்தில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் கலந்து கொண்ட சுமந்திரன் அவர்கள் உரையாற்றும் பொழுது இலங்கை சோசலிச குடியரசின் […]
கருணாவுக்கு மஹிந்தவால் கிடைக்கபோகும் அதி முக்கிய பதவி !
இலங்கையில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச நாட்டின் அனைத்து பதவி கட்டமைப்புகளிலும் மாற்றம் செய்து வருகின்றார். வடக்கு மாகாணத்துக்கு தமிழ் பேசும் ஆளுநர் ஒருவரை நியமிக்கும் பொருட்டு சிரேஷ்ட ஊடகவியலாளர் பெயர் முன்மொளியப்ப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவி முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்று அழைக்கப்படும் முரளிதரனுக்கு வழங்கப்படவுள்ளதாக சில ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன. கருணா இதுவரை மஹிந்த தரப்புடன் […]





