இலங்கை செய்திகள்

மஹிந்தவிற்கு இன்று நீதிமன்றத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சர்களுக்கும் பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக தாக்கல் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, மனு மீதான விசாரணையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு சட்டவிரோதமானது என்று […]

பிரதமராக ரணில்! உச்சகட்டத்தில் பரபரப்பில் கொழும்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக முக்கிய அரசியல் செயற்பாட்டாளர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானவுடன் முக்கிய அரசியல் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும், இது குறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க […]

மகிந்தவிற்கு

செக் வைத்துள்ள மகிந்த அணி! வசமாக சிக்கிய ரணில்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் கூட, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து, நாளை நம்பிக்கைப் பிரேரணை ஒன்றை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டுள்ள நிலையிலேயே, உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார். ‘நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தீர்மானத்தை நிறைவேற்றி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் அடிப்படை […]

எழுத்து மூல உத்தரவாதத்திலிருந்து பின்வாங்குகிறார் சம்பந்தன்?

ஐக்கிய தேசிய முன்னணியுடன் எழுத்துமூல உடன்படிக்கை செய்யப்பட்ட பின்னரே, ஆதரவளிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்திருந்தார். இதையடுத்தே, கூட்டமைப்பின் எம்.பிக்கள், ஐ.தே.முன்னணி பிரேரிக்கும் பிரதமரை ஆதரிப்பதாக கையொப்பமிட்டனர். கிட்டத்தட்ட அந்த கையெழுத்து, வெற்றுத்தாளில் இடப்பட்ட கையெழுத்தாக அமைந்து விட்டதா என்ற சந்தேகம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலரிடம் ஏற்பட்டு விட்டது. எழுத்துமூல உத்தரவாத நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பின் தலைமை […]

மைத்திரிதான் இரகசிய வாக்குறுதி தந்தார்! மகிந்த

நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைமைக்கு என்னை காரணம் சொல்லாதீர்கள். இவையெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் முடிவினாலேயே ஏற்பட்டன. பிரதமராக என்னை நியமியுங்கள் என்று நான் கேட்கவில்லை. அவர்தான் என்னை அழைத்தார். நீங்களே இதற்கு பொருத்தமானவர் என கூறி, பதவியேற்கச் சொன்னார்“ இப்படி கூறி, அரசியல் குழப்பத்திற்கான முழுமையான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபாலவின் பக்கம் தட்டிவிட்டுள்ளார், சில வாரம் பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச எம்.பி. வெளிநாட்டு ஊடகமொன்றின் கொழும்பு […]

தரம் 5 புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளி அடுத்த வாரம்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தரம் 5 பரீட்சையின் பின்னர் உயர் ரக பாடசாலைகளுக்கு பிரவேசிப்பதற்கும், அரச புலமைப் பரிசில் நிதியைப் பெறுவதற்கும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய ஆகக் குறைந்த பரீட்சைப் புள்ளியைக் குறிப்பதாக இந்த வெட்டுப் புள்ளி அமையவுள்ளது. இம்முறை புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் இலகுவானதாக […]

சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாடாளுமன்றில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சீர்கேடான செயற்பாடுகள் இனி இடம்பெற இடமளிக்கப்போவதில்லை என்பதோடு நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் இடம்பெற்ற சகல நடவடிக்கைகளுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார். இதேவேளை, மறைக்கல்வியினூடாக சிறுவர்கள் கற்றுக்கொள்ளும் நன்நடத்தைகளை போன்று நாட்டின் மீயுயர் நிறுவனமாகிய நாடாளுமன்றினூடாகவும் நன்நடத்தைக்களை சிறுவர்கள் கற்றுக்கொள்ள கூடிய சூழல் விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற […]

பொன்சேகா

பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதானே நாம் சொல்ல வேண்டும்!

“பைத்தியக்காரனை பைத்தியக்காரன் என்றுதான் நாம் சொல்ல முடியும். அவ்வாறு சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நிலைமைக்குப் போய்விட்டார் என்பதை நினைத்து, அவருக்கு வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். மக்கள் இன்று கடும் கொதிப்பில் இருக்கின்றார்கள். அவர்களே, மைத்திரிபாலவை ஓட ஓட விரட்டியடிக்கும் காலம் நெருங்கிவிட்டது.” – இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். […]

பரபரப்பாகிறது கொழும்பு! மைத்திரியின் அவசர நடவடிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் முக்கியமான சந்திப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான உயர் நீதிமன்ற விசாரணைகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதில் முக்கியமான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக கூட்டணியின் அரசியல் நபர் ஒருவர் கூறியுள்ளார். இதேவேளை நேற்றையதினம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாயினும் அதனை தாம் ஏற்கவுள்ளதாக ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நீதிமன்றத்தில் இன்று தப்பினார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு பிற்போடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அது குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்த முன்னாள் வடக்கு முதல்வர் அவர்களைப் பதவி நீக்க நடவடிக்கை எடுத்தார். இதற்கமைய, வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் பதவி […]