இலங்கை அணியின் 17 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்குப் பதிலாக இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து பிரதமரோ அல்லது அமைச்சர்களோ இல்லாத நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்க வேண்டிய நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நியூசிலாந்துக்கு இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20, டெஸ்ட் போட்டிகளில் […]
இலங்கை செய்திகள்
ரணில் தரப்பிற்கு இன்று காத்திருந்த அதிர்ச்சிகர முடிவு
மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுவை நியமிக்குமாறு கோரி ரணில் விகரமசிங்க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது உயர்நீதிமன்றம் குறித்த மனுவை நிராகரித்துள்ளது. இந்நிலையில், மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனு மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் […]
வைரலாக பரவும் சம்பந்தன் – மைத்திரி ஆவணம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையே இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஒரு ஆவணப் பிரதியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றமையினால், அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கை பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கியிருந்தனர். இந் நிலையில் ஐக்கிய […]
இன்று மாலையின் பின் அவசர அவசரமாக மைத்திரி எடுக்கவுள்ள முடிவு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய தினம் மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான மனு மீதான விசாரணையின் தீர்ப்பும் 4மணியளவில் வெளியிடப்படும் எனவும் நீதிமன்றத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையிலேயே தீர்ப்பின் பின்னர் மைத்திரி தலைமையிலான விசேட கூட்டம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் மனுவை விசாரிக்க ஐவரடங்கிய குழு
மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மஹிந்த தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழுவை நியமிக்குமாறு உயர்நீதிமன்றில் மனுத்தால் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் புதிய அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கெதிராக மஹிந்த தரப்பு உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரிக்கப்பட்டு நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த மனுவை விசாரிக்க ஐவரடங்கிய நீதிமன்ற […]
நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில்!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. நாட்டின் எதிர்கால அரசியல் நிலையை தீர்மானிக்கும் அதிமுக்கிய தீர்ப்பாக இது அமையவுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்பார்த்து உயர்நீதிமன்ற வளாகத்தில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் குவிந்துள்ளனர். அத்தோடு, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக விசேட செய்தியாளர் தெரிவித்தார். மேலதிக […]
மைத்திரிக்கு எதிராக கொழும்பில் வெடிக்கும் போராட்டம்!
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கான சிவில் சமூக அமைப்புகள் நேற்று கொழும்பு லிப்டன் சுற்று வட்டாரத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள், புதிய தலைமுறையினர் , ஜனநாயகம் மற்றும் இலங்கை பெண்கள் அமைப்புக்கள் உட்பட 17 சங்கங்கள ஒன்றினைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இது வரை காலம் தனி தனியாக ஆர்ப்பாட்டம் முற்கொண்ட சங்கங்கள் […]
ரணிலுக்கு ஆதரவு கோரி இன்று சபையில் வாக்கெடுப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை இன்று (12) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்தப் பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க, அகில விராஜ்காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, பளனி திகாம்பரம், மங்கள சமரவீர, ரிஷாட் பத்தியுத்தீன் ஆகியோரினல் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை குறித்து கட்சித் […]
ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை சமர்ப்பிப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும் இரு பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இதன்போது ஐக்கிய […]
மஹிந்தஷவின் தலையீடு தொடர்பில் சம்பந்தனே கூறியது
மஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இன்றி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது – சம்பந்தனே கூறியிருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு பொது தேர்தலை நடத்துவதே சிறந்த தீர்வாகும். தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறியதையடுத்து ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. இதன் நிமித்தமாகவே கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி பிரதமராக நியமித்தார். எனவே பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் ஐக்கிய […]





