இலங்கை செய்திகள்

தமிழர் தாயகத்தில் உறுதியுடன் தொடர்கின்றன உறவுகளின் போராட்டங்கள்

தமிழர் தாயகத்தில் உறுதியுடன் தொடர்கின்றன உறவுகளின் போராட்டங்கள்!

தமிழர் தாயகத்தில் உறுதியுடன் தொடர்கின்றன உறவுகளின் போராட்டங்கள்! கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து தருமாறும், அவர்களுடைய உண்மையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி இன்று 31 ஆவது நாளாகவும் கிளிநொச்சியில் போராட்டம் தொடர்கின்றது. வடக்கு, கிழக்கில் ஏனைய மாவட்டங்களில் இடம்பெறும் போராட்டங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன. வடக்கில் 4 மாவட்டங்களிலும், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தியே அவர்கள் போராட்டத்தைத் […]

ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை

ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை!

ஐ.நாவில் இன்று வருகின்றது மனித உரிமை ஆணையரின் அறிக்கை! இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் இந்த அமர்வில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க வேண்டும். […]

கலப்புப் பொறிமுறைக்கு - ரணில் திட்டவட்டம்

கலப்புப் பொறிமுறைக்கு ஒருபோதும் இணங்காது இலங்கை! – ரணில் திட்டவட்டம்

கலப்புப் பொறிமுறைக்கு ஒருபோதும் இணங்காது இலங்கை! – ரணில் திட்டவட்டம் “நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைப்பதற்கு இலங்கை ஒருபோதும் இணங்காது. அத்துடன், சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திலும் இலங்கை இணைந்துகொள்ளாது.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மேலும் கூறியவை வருமாறு:- “இலங்கையில் நடைபெற்ற போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. இவை குறித்து விசாரணை […]

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை நான் இயக்கவில்லை! – கோட்டா கூறுகின்றார்

இரகசிய இராணுவக் கொலைக் குழுவை நான் இயக்கவில்லை! – கோட்டா கூறுகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இரகசிய இராணுவக் கொலைக் குழுவை இயக்கி ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டார் என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார். 2005 […]

எமது விடுதலை கானல் நீராகுகின்றது! - சார்ள்ஸ் எம்.பி

எமது விடுதலை கானல் நீராகுகின்றது! – சார்ள்ஸ் எம்.பியிடம் அரசியல் கைதிகள் கவலை

எமது விடுதலை கானல் நீராகுகின்றது! – சார்ள்ஸ் எம்.பியிடம் அரசியல் கைதிகள் கவலை “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கும் பட்சத்தில் தமது விடுதலை கானல் நீராகும் என தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இலங்கை அரசுக்கு ஏற்கனவே கால அவகாசம் […]

யாழில் வெளிநாட்டு மோகத்தில் காசு கொடுத்து ஏமாந்த விஜிதன்

யாழில் வெளிநாட்டு மோகத்தில் காசு கொடுத்து ஏமாந்த விஜிதன் துாக்கில்

யாழில் வெளிநாட்டு மோகத்தில் காசு கொடுத்து ஏமாந்த விஜிதன் துாக்கில் திருநெல்வேலி சந்தியில் கடையில் துாக்கில் தொங்கி மரணமான 34 வயதான சுந்தரலிங்கம் விஜதன் வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றில் லட்சக்கணக்கான காசு கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாலேயே துாக்கில் தொங்கி மரணமனதாக தெரியவருகின்றது.          

விமலின் பிணை மனு நிராகரிப்பு

விமலின் பிணை மனு நிராகரிப்பு

விமலின் பிணை மனு நிராகரிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி விகும் கலு ஆராச்சியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது, நிதிக் […]

இந்து சமய பாடத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை

இந்து சமய பாடத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை திருத்த விசேட குழு

இந்து சமய பாடத்திட்டத்திலுள்ள குறைபாடுகளை திருத்த விசேட குழு இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்கும் வகையில் புதிய குழு ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார் இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று கல்வி இராஜாங்க அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த […]

விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா

விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா குற்றச்சாட்டு

விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுப்பதாக ஸ்ரீலங்கா குற்றச்சாட்டு இந்திய மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்படை முழுமையான அறிக்கை தயாரிப்பதற்கு இந்திய அரசு சார்பிலான ஒத்துழைப்புகள் தாமதிக்கப்படுவதாக கடற்படைப்பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாக்குழுகே குற்றம் சாட்டியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவதினத்தன்று இந்திய மீனவர்கள் பயன்படுத்திய ஜீ.பி.எஸ்.உள்ளிட்ட தொழில்நுட்ப தகவல்களை ஸ்ரீலங்கா கடற்படைக்கு பெற்றுத்தருமாறு இந்தியாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும் இந்தியா இதுவரை அத்தகவல்களை வழங்காமையினால் விரிவான […]

போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன்

போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு

போரில் 150,000 மக்கள் கொல்லப்பட்டனர்: இரா சம்பந்தன் இந்தியாவில் தெரிவிப்பு வன்னியில் இடம்பெற்ற மூன்றுதசாப்தகால போரில் 150,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான தி ஐலண்ட் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவின், புதுடில்லியில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]