நிரந்தர வீடற்ற மீனவர்களுக்கும், முழுமையாக பூரணப்படுத்தப்படாத வீடுகளையுடைய மீனவ குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் மீன் பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தன் கீழ், முழுமையாக அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியுதவியும், பகுதியளவில் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை பூரணப்படுத்துவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நோனாகம – கலாசார நிலையத்தில் இதற்கான நிதியுதவி […]
இலங்கை செய்திகள்
புலனாய்வாளர்கள் இருவர் கைது
யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை ஒரு சில நாள்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டினருந்தன. விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று கொன்ஸ்டபிள் ஒருவரும், உப பரிசோதகர் ஒருவரும் […]
பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் இனிமேல் கூட்டமைப்பு இடமளிக்காது
நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம். பல விட்டுக் கொடுப்புகளையும் செய்துள்ளோம். இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். இதனை நாம் அடைந்துகொள்ள இலங்கை அரசுக்கு தென்னாபிரிக்க அரசு கடும் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் […]
இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மேலும் நீடிப்பு!
கடந்த திங்கட் கிழமை இடைக்கால அறிக்கை மீதான விவாதம் ஆரம்பமாகிய போதும் எல்லா உறுப்பினர்களது கருத்துக்களையும் பெறும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விவாதம் இடம்பெறும் என சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். இந்த விவாதம் பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையில் நேற்று நான்காவது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எப்பல்’ போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
இளையோர் போதைக்காகப் பயன்படுத்தும் எப்பல் எனும் போதை மாத்திரைகளுடன் கடவத்தைப் பேருந்து நிலையத்தில் சந்தேக நபரைத் திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினர் கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்புப் பொலிஸ் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாகக் கடவத்தைப் பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 400 எப்பல் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பகா மாவட்டத்தின் […]
கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்றமும் இல்லை.!
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிக்கமைவாக சாய்ந்தமருது பிரதேச சபையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். அதனை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தயாராக இருந்தோம். எனினும் கல்முனை மாநர சபையை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாக பிரிக்குமாறு தற்போது அப்பிரதேச மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் அபிப்பிராயம் பெறாது அதனை நிறைவேற்ற முடியாது. ஆகவே தற்போதைக்கு கல்முனை மாநகர சபையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளாது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் […]
ஆயுள் தண்டனை
தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அத்தியட்சர் சுனில் அப்ரூவைக் கொலை செய்த குற்றத்தின் பேரில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நீண்ட கால விசாரணைகளையடுத்தே உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இத்தீர்ப்பை வழங்கினார். சுனில் அப்ரூ 2003ஆம் ஆண்டு தெஹிவளை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது தரப்பில் வழக்குப் பதியப்பட்டதுடன், குற்றவாளியே இக்கொலையின் சூத்திரதாரி என்பதையும் […]
வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று காலை 11.30 மணியளவில் கஞ்சாவினை எடுத்துச் சென்ற நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இன்று 11.30 மணியளவில் கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் ராஜ்மோகன் என்பவர் கிளிநொச்சியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற பேருந்தில் 3 கிலோ 610 கிராம் கேரளா கஞ்சாவினை தனது பயணப்பொதியில் மறைத்து எடுத்துச் சென்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். போதை ஒழிப்பு பிரிவினர் வவுனியா பேருந்து நிலையத்தில் சந்தேகத்தில் சோதனை […]
இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின் இறுதி நாள் இன்று
புதிய அரசியலமைப்புக்கான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான மூன்று நாள் விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும்.
அரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடனான சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.





